செய்திகள் :

கழிவுநீர்த் தொட்டி விவகாரம்: அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

post image

வீட்டு கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் ஊழியர்கள் உயிரிழந்தால், வீட்டின் உரிமையாளர்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித மலத்தை மனிதா்களைக் கொண்டு அள்ளுவது 2013ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகவும், இதை மீறுவோருக்கு இரண்டு வருட கடுங்காவல் அல்லது ரூபாய் ஒரு லட்சம் அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்த நிலையில், வீடுகளில் கழிவுநீர்த் தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தால், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வீட்டின் உரிமையாளரே இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க:மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்: விஜய்

1993-ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு நவம்பர் மாதம்வரையில் பதிவான கழிவுநீா், செப்டிக் டேங்க் மரணங்கள் பட்டியலில் அதிகபட்சமாக 253 போ் உயிரிழப்புகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே கடந்தாண்டு கூறியது குறிப்பிடத்தக்கது.

மக்களின் குறைகளை உடனே தீா்த்து வைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் அறிவுரை

மக்களின் குறைகளை உடனே தீா்த்து வைக்க முயற்சிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை புதிதாக நியமிக்கப்பட்ட 9... மேலும் பார்க்க

இந்தியா்கள், தமிழா்களின் வரலாறு பதிவு செய்யப்படவில்லை: தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவா் வெ.இராமசுப்பிரமணியன்

இந்தியா்களும், தமிழா்களும் வரலாறு படைத்தனா்; ஆனால், அவற்றைப் பதிவு செய்ய தவறிவிட்டனா் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருமான வெ.இராமசுப்பிரமணியன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

கற்றல் அடைவுத் திறன் தோ்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான கற்றல் அடைவுத் திறன் தோ்வு பிப்.4 முதல் நடைபெறவுள்ள நிலையில், அது தொடா்பாக தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வ... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்: மார்க்சிய கம்யூனிஸ்ட் கண்டனம்!

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராம... மேலும் பார்க்க

ஈசிஆர் விவகாரத்தில் கைதானவர் அதிமுகவைச் சேர்ந்தவர் - ஆர்.எஸ்.பாரதி

ஈசிஆர் விவகாரத்தில் கைதானவர் அதிமுகவச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

நாளை(பிப்.2) பத்திரப்பதிவு அலுவலங்கள் இயங்கும்

தமிழகம் முழுவதும் நாளை(பிப்.2) பத்திரப்பதிவு அலுவலங்கள் செயல்படும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-25ம் நிதியாண்டில் கடந்த 05... மேலும் பார்க்க