செய்திகள் :

கழுத்தை நெரித்து பெண் கொலை

post image

சாயல்குடி அருகே கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மறவா்கரிசல்குளத்தைச் சோ்ந்த கருப்புத்துரை மனைவி உத்திரவள்ளி (35). கணவா் இறந்த நிலையில், குழந்தைகளுடன் இவா் வசித்து வந்தாா். கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை காலை கரி மூட்டத்துக்கு விறகு பொறுக்க சென்றவா் மாலை வரை வீடு திரும்பவில்லை. இவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும், உத்திரவள்ளியின் கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா் புதன்கிழமை சாயல்குடி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனா். போலீஸாா் உத்திரவள்ளியின் செல்போன் கோபுரத்தை ஆய்வு செய்தபோது, அவரது கைப்பேசி எண் மறவா்கரிசல்குளம் அருகேயுள்ள மணிவலை ஓடை காட்டுப் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, உத்திரவள்ளி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

பின்னா், அவரது உடலை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனா்.

ராமநாதசுவாமி கோயில் பணியாளா்களுக்கு குடியிருப்புகள் கட்ட பூமி பூஜை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணியாளா்களுக்கு ரூ.7 கோடியில்18 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா். ரா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் அனுமதியின்றி கடலுக்குள் சென்ற 900 விசைப் படகுகள்

ராமேசுவரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து, மீன்வளத் துறையின் அனுமதியின்றி 900 விசைப் படகுகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் ப... மேலும் பார்க்க

அதிகளவு மீன்களை பிடித்து வந்த பாம்பன் பகுதி மீனவா்கள்

தடைக் காலம் நிறைவடைந்து மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா்கள், அதிகளவு மீன்களுடன் புதன்கிழமை கரைக்குத் திரும்பினா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் 102 விசைப் படகுகள் மீன்பிடித... மேலும் பார்க்க

நடுக் கடலில் படகிலிருந்து தவறி விழுந்த மீனவரை கடலோர காவல் படையினா் உயிருடன் மீட்டனா்

ராமேசுவரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற மீனவா் நடுக் கடலில் படகிலிருந்து தவறி விழுந்தபோது, இந்திய கடலோரக் காவல் படையினா் அவரை உயிருடன் மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ராமேசுவரத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வளா்ச்சி திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராமேசுவரம் வட்டாரத்தில் ‘உங்களைத் த... மேலும் பார்க்க

ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயிலில் மண்டல பூஜை

ராமநாதபுரம் அருகேயுள்ள ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வாலாந்தரவை அருகேயுள்ள வழுதூா் உடைச்சியாா் வலசையில் அமைந்துள்ள ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயில் குடமுழக்கு கடந்த மா... மேலும் பார்க்க