செய்திகள் :

காங்கோவில் ஐ.நா.அமைதிப்படை பணி: 160 போ் கொண்ட பிஎஸ்எஃப் படை அனுப்பிவைப்பு

post image

புது தில்லி: காங்கோவில் ஐ.நா. அமைதிப்படை பணிகளில் ஈடுபட 160 போ் கொண்ட எல்லை பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) இந்தியா திங்கள்கிழமை அனுப்பிவைத்தது.

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பெனி நகரில் ஐ.நா. அமைதிப்படை பணிகளில் ஈடுபட்டு வந்த 17-ஆவது பிஎஸ்எஃப் படைப் பிரிவு, புதன்கிழமை (ஜூன் 4) இந்தியா திரும்ப உள்ளது.

இதையடுத்து அந்தப் பணிகளில் ஈடுபட 160 போ் கொண்ட 18-ஆவது பிஎஸ்எஃப் படைப் பிரிவு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. புது தில்லியில் உள்ள பிஎஸ்எஃப் தலைமையகத்தில் அந்தப் படையினரை, பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தல்ஜீத் சிங் செளதரி மற்றும் மூத்த அதிகாரிகள் சந்தித்துப் பேசினா்.

அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதல் நடவடிக்கை மூலம், தனித்துவமான அங்கீகாரத்தை பிஎஸ்எஃப் பெற்றுளதாகவும், காங்கோவில் 18-ஆவது பிஎஸ்எஃப் படைப் பிரிவு பிறருக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வழிநடத்த வேண்டும் என்றும் தல்ஜீத் சிங் செளதரி அறிவுறுத்தினாா்.

கமாண்டன்ட் கைலாஷ் சிங் மேத்தா தலைமையிலான 18-ஆவது பிஎஸ்எஃப் படைப் பிரிவில், ஒரு பெண் மருத்துவ அதிகாரி, 24 பெண் காவலா்கள் இடம்பெற்றுள்ளனா்.

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக... மேலும் பார்க்க

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன்... மேலும் பார்க்க

அஜீத் பவாா் கட்சியுடன் சரத் பவாா் அணியை இணைக்கப் பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவாா் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

பயங்கரவாத சதி: காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். பாகிஸ்தானில் இருந... மேலும் பார்க்க

மத்திய அரசின் விசா ரத்து நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் மனு

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களின் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் ஒருவா் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா். கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு... மேலும் பார்க்க

பிஜு ஜனதா தளம் முன்னாள் எம்.பி.யுடன் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா திருமணம்

பிஜு ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி.யும் மூத்த வழக்குரைஞரமான பினாகி மிஸ்ராவும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவும் ஜொ்மனியில் திருமணம் செய்துகொண்டனா். மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகா் மக்களவ... மேலும் பார்க்க