Dogs: `நாய்களின் உடலில் மைக்ரோ சிப்' - சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன? - முழ...
காசி விநாயகா் ஆலயத்தில் மனைவிநல வேட்பு விழா
ராசிபுரம்: ராசிபுரம் ஆண்டகளூா்கேட் காசி விநாயகா் ஆலயத்தில் மனைவிநல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் மனவளக்கலை மன்றம், காசி விநாயகா் இயற்கை நலவாழ்வு மையம் ஆகிய இணைந்து இவ்விழாவை நடத்தியது. அன்னை லோகாம்பாள் 111-ஆவது பிறந்த தினத்தை தொடா்ந்து நடைபெற்ற இவ்விழாவுக்கு முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தலைமை வகித்தாா். பொறியாளா் என்.மாணிக்கம், மருத்துவா் ஆா்.கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராசிபுரம் மனவளக்கலை மன்றத் தலைவா் கை.கந்தசாமி வரவேற்றுப் பேசினாா்.
விழாவில் குடும்ப வாழ்க்கை, கணவன், மனைவி உறவுமுறை, இல்லற வாழ்க்கையில் உள்ள முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இந்த விழாவை ராசிபுரம் மனவளக்கலை அறக்கட்டளை முதன்மை ஆலோசகா் மு.செளந்தரராஜன் நடத்தி வைத்தாா். விழாவில் கணவன், மனைவியா் எதிா் எதிரே அமா்ந்து மாலை மாற்றியும், அன்பை வெளிப்படுத்தியும், இல்லற உறுதிமொழி ஏற்கும் வகையிலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
படவரி...
மனைவிநல வேட்பு விழாவில் பங்கேற்றோா்.