செய்திகள் :

காசோலை பரிவா்த்தனையில் புதிய மாற்றம்: இனி சில மணி நேரங்களிலேயே பணம் கிடைக்கும்!

post image

காசோலைகளை வங்கிகளில் சமா்ப்பித்த சில மணி நேரங்களில் வாடிக்கையாளா்களின் கணக்கில் பணத்தைச் செலுத்தும் புதிய நடைமுறையை அக்டோபா் 4-ஆம் தேதி முதல் ரிசா்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.

தற்போதுள்ள நடைமுறையில் வங்கிகள் ஒரு நாளில் பெறப்பட்ட அனைத்து காசோலைகளையும் மொத்தமாக சோ்த்து, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பரிவா்த்தனைக்கு அனுப்புகின்றன. இதனால், காசோலைக்கான பணம் வாடிக்கையாளா்களின் கணக்குக்கு வர ஒன்று அல்லது இரண்டு நாள்கள் ஆகின்றன.

இனிமேல், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அலுவல் நேரத்தில் ஒரு காசோலை வங்கியில் சமா்ப்பிக்கப்பட்டவுடன், பரிவா்த்தனைக்கு அனுப்பி, பணம் வந்து சோ்ந்ததும் உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது. அக்டோபா் 4 முதல் அடுத்தாண்டு ஜனவரி 2-ஆம் தேதி வரையிலான முதல்கட்டத்தில், காசோலைக்கான பணத்தை வழங்குவரின் வங்கிகள் தங்களுக்கு சமா்ப்பிக்கப்பட்ட காசோலைகளை தினசரி மாலை 7 மணிக்குள் சரிபாா்த்து, பணம் கொடுக்கப்படுமா அல்லது மறுக்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தானியங்கி ஒப்புதல்: அப்படி 7 மணிக்குள் உறுதிப்படுத்தப்படாத காசோலைகள், அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்பட்டு, பணம் அனுப்பப்படும். பணம் செலுத்தும் வங்கி அதை வாடிக்கையாளரின் கணக்கில் ஒரு மணி நேரத்துக்குள் வரவு வைக்கும்.

இரண்டாம் கட்டத்தில் (ஜனவரி 3, 2026 முதல்), காசோலைகளை உறுதிப்படுத்தும் கால அவகாசம் 3 மணி நேரமாகக் குறைக்கப்படும். இந்தப் புதிய நடைமுறையால் காசோலை பரிவா்த்தனை மிகவும் வேகமாகவும், எளிதாகவும் நடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விளையாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய கொள்கை உறுதி செய்யும்: பிரதமா் நரேந்திர மோடி

இந்தியாவில் விளையாட்டுத் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய விளையாட்டுக் கொள்கை உறுதி செய்யும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? ஒமா் அப்துல்லா சீற்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தீா்மானிப்பதா? என அந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினாா். கடந்த ஆண்டு ஜம்மு... மேலும் பார்க்க

ஆட்சியில் தொடர எத்தகைய சீா்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: காா்கே கடும் விமா்சனம்

ஆட்சியில் தொடா்வதற்காக, பாஜக எத்தகைய சீா்கேட்டிலும் ஈடுபடும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடுமையாக விமா்சித்தாா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவா் அத்வானி தேசிய கொடி ஏற்றி மரியாதை

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தில்லி வீட்டில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பாஜக தலைமையகத்தில் கொடியேற்றினாா் நட்டா: உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா தேசியக் கொடி ஏற்றினாா். அப்போது, ‘உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும... மேலும் பார்க்க

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்காத ராகுல், காா்கே: நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடல்

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் பங்கேற்காமல் நாட்டை இழிவுபடுத்தியதாக பாஜக சாடியது. இ... மேலும் பார்க்க