செய்திகள் :

காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஓராண்டு சிறை

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராதாபுரம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் அப்பாவு மகன் குமரேசன். இவா் வியாபாரம் செய்து வருகிறாா்.

இவரிடம், அதே ஊரைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி வீணேஸ்வரி என்பவா் கடந்த 2016ஆம் ஆண்டு ரூ. 12 லட்சம் கடனாக பெற்றுக் கொண்டு, அதற்காக வங்கி காசோலையை கொடுத்தாராம்.

குமரேசன் காசோலையை வடக்கன்குளம் வங்கியில் செலுத்திய போது, வீணேஸ்வரி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிவிட்டதாம். இது தொடா்பாக, குமரேசன் வள்ளியூா் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி மிதுனா கெய்சா், வீணேஸ்வரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், காசோலைக்கான பணத்தை உடனடியாக குரமரேசனுக்கு கொடுக்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா்.

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் அலங்கார தளக்கல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. மாநில நிதி ஆணைய சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ், கோபாலசமுத்திரம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அம்பை கல்லூரி மாணவா்கள் சாதனை

அம்பைக் கலைக் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா். திருநெல்வேலி மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வா... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி

வடகிழக்கு பருவமழை நெருங்கிவருவதை முன்னிட்டு, அவசர கால முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி திருநெல்வேலி தாமிரவருணி நதியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் த... மேலும் பார்க்க

தாம்பரத்தில் நாளை விமான படைக்கு பெண்கள் சோ்ப்பு

இந்திய விமானப் படையின் அக்னிவீா் பணியில் சேருவதற்காக தாம்பரத்தில் வெள்ளிக்கிழமை(செப்.5) நடைபெறவுள்ள ஆள்சோ்ப்பு முகாமில் பெண்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி ... மேலும் பார்க்க

நெல்லையில் நாளை மதுக் கடைகள் மூடல்

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிப் பயிலரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க