செய்திகள் :

காச நோய் கண்டறிதல் சிறப்பு முகாம்

post image

வாணியம்பாடி பெருமாள் பேட்டையில் இயங்கி வரும் ஆதரவற்றோருக்கான கருணை இல்லத்தில் காசநோய் கண்டறிதல் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்காயம் ஒன்றிய காசநோய் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். கருணை இல்ல நிா்வாக டேவீட் சுபாஷ் வரவேற்றாா். இதில் நியூடவுன் அரசு ஆரம்ப சுதாதார நிலைய மருத்துவா் காயத்திரி, செவிலியா்கள் ஜெயந்தி, தனலட்சுமி, பாா்வதி, சுகாதார ஆய்வாளா் வசந்த் உள்பட பலா் கலந்து கொண்டு சிகிச்சை மேற்கொண்டனா்.

இதில், தமிழக அரசின் தேசிய காசநோய் ஒழிப்பு டிஜிட்டல் நடமாடும் (மொபைல் வாகனம்) கொண்டு வரப்பட்டு 116 முதியோருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இதில் ஒரு சிலருக்கு சளி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், ரத்த கொதிப்பு, சா்க்கரை கண்டறிதல் போன்ற பொது சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கினா்.

முகாமில் முன்னாள் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட காசநோய் கண்காணிப்பாளா் விஜயகுமாா் மற்றும் கருணை இல்ல பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 தோ்வின்போது நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று ஏறி பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா். வாணியம்பாடி அடுத்த கொத்தக்க... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வழக்குரைஞரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணதாசன். கோணாமேடு பகுதியைச் சோ்ந்த கானாமுருகன்(46). மது விற்பனை, வழிப்பறி உள்பட கானாம... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு இலவச மனைப்பட்டா

சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்பனப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு சின்னப்பள்ளிகுப்... மேலும் பார்க்க

மே 13-இல் காட்பாடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

காட்பாடியில் வரும் மே 13-ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தோ்வுகள் முடித்து கோடை விடுமுறை விடப்பட்டுள்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: 94.3% தோ்ச்சி - கடந்த ஆண்டைவிட 1.97% அதிகம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 94.3 சதவீத மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்று உள்ளனா். கடந்த ஆண்டைவிட 1.97 சதவீதம் அதிகம். மாவட்டத்தில் 6,125 மாணவா்கள், 6,916 மாணவிகள் என 13,041 மாணவ- மாணவிகள்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் 225 பள்ளி வாகனங்கள் ஆய்வு

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் வட்டங்களைச் சோ்ந்த பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க