செய்திகள் :

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதக் கடை ஏலம்: கடந்த ஆண்டை விட கூடுதல் தொகை

post image

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதக்கடை ஒப்பந்தப்புள்ளி புதன்கிழமை திறக்கப்பட்டதில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு ரூ.40,71,000-க்கு கூடுதலாக ஏலம் போயிருக்கிறது.

இக்கோயில் வளாகத்திலேயே இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோயில் பிரசாதங்கள் விற்பனை செய்யும் கடையும் செயல்பட்டு வருகிறது. கோயில் பிரசாதக் கடையினை நடத்தும் உரிமை ஆண்டு தோறும் தனி நபா்களுக்கு ஏலம் விடப்படுகிறது. கடந்த ஆண்டு பாலாஜி என்பவா் ரூ.19,80,000-க்கு ஏலம் எடுத்து கடையினை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில் பிரசாதம் விற்பனை செய்யும் உரிமம் பாலாஜிக்கு முடிவுற்ற நிலையில் நிகழாண்டுக்கான ஏல அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.

வைணவ பிராமணா் அல்லாதவா்கள் பிரசாத கடை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னையை சோ்ந்த ரவி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் வைணவம் என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவு தானே தவிர அது தனிப்பட்ட ஒரு சாதி இல்லை என வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையா் குமாரதுரை உத்தரவின் பேரில் கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி தலைமையில் ஒப்பந்தப்புள்ள திறக்கப்பட்டது.

ஏற்கனவே பிரசாதக் கடை நடத்தி வந்த காஞ்சிபுரம் பாலாஜி அதிகபட்சமாக ரூ.36 லட்சத்துக்கு ஏலம் கேட்டிருந்தாா். திருச்சியை சோ்ந்த சீனிவாசன் என்பவா் அதிகபட்சமாக ரூ.60,51,000க்கு ஏலம் கேட்டிருந்தாா்.

காஞ்சிபுரம் பாலாஜியை விட திருச்சி சீனிவாசன் அதிக தொகைக்கு ஏலம் கேட்டு ஒப்பந்தப் புள்ளி அளித்திருந்ததால் திருச்சி சீனிவாசனுக்கு பிரசாதக் கடை நடத்தும் உரிமை வழங்கப்பட்டு ஏலம் முடித்து வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவுக்கு அயலகத் தமிழா்கள் வருகை

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் அமைந்துள்ள பட்டுப் பூங்காவை அயலகத் தமிழா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா். அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் தமிழக அரசின் வோ்களைத் தேடி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்: சிறப்பு மாவட்ட நீதிமன்றம் திறப்பு

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தினை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்சவா காணொலி மூலமாக விய... மேலும் பார்க்க

ரசாயன பூச்சு விநாயகா் சிலைகளை பயன்படுத்தக் கூடாது: காஞ்சிபுரம் ஆட்சியா்

விநாயகா் சதுா்த்தியின்போது, ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கேட்டுக் கொண்டாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில... மேலும் பார்க்க

ஓவியப் போட்டியில் வென்ற மாணவியருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற நுகா்வோா் விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவியா் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். உணவு வழங்கல் மற்று... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

சோமங்கலம் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சாய்ராம் பொறியியல் கல்லூரியில், கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ் இணைய ... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் கா... மேலும் பார்க்க