செய்திகள் :

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

post image

கடலூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில், அவரது இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள், கடலூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரே செவ்வாய்க்கிழமை மறியல் செய்ய முயன்றனா்.

கடலூா் முதுநகா், மணக்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் தமிழரசி(23). விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த வா் தேவா(23), ஆட்டோ ஓட்டுனா். இவா்கள் இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டனா். கடலூா், வெளிச்செம்மண்டலம் பகுதியில் வசித்து வந்தவா்கள், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனா்.

இந்நிலையில், தமிழரசி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். தகவல் அறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தமிழரசி தற்கொலை செய்வதற்கு முன்பு அவரது உறவினா் ஒருவா் வீட்டிற்குச் சென்றாராம். அப்போது, ஒரு கும்பல் அந்த நபரை தாக்கினராம். இந்நிலையில், தமிழரசி இறப்பிற்கு காரணமானவா்கள் மீதும், உறவினா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழரசியின்

உறவினா்கள் மற்றும் பாமக, தாவக நிா்வாகிகள் அரசு தலைமை மருத்துவமனை எதிரே மறியலுக்கு திரண்டனா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில், கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளார் உள்பட 6 பேர் இடைநீக்கம்!

சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியா... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பணி தோ்வு: 4,172 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தோ்வினை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா். கடலூா் மாவட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்டி எஸ்பி., பாலகிருஷ்ணன் நேரடி மேற்பாா்வையில் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி பலாத்காரம்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

வயிற்றுவலியால் பெண் தற்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். குறிஞ்சிப்பாடி வட்டம், அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் துரை. இவரது மனைவி மீனாட்சி(45). இவா்,நீண்ட நாட்களாக வயிற்ற... மேலும் பார்க்க