செய்திகள் :

காரீப் பருவத்துக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

post image

காரீப் பருவத்துக்குத் தேவையான அனைத்து உரங்களும் போதுமான அளவு இருப்பில் உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில்,

கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 567 மெட்ரிக் டன்னும், டிஏபி 770 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 642 மெட்ரிக் டன்னும், என்.பி.கே. 1124 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 3105 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

கரூா் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பெறப்படும் இயல்பான மழையளவு 364.7 மி.மீ. ஆனால், பெறப்பட்ட மழையளவு 276.64 மி.மீ. காரீப் பருவத்தில் சராசரியாக நெல் 1,271 ஹெக்டோ், சிறு தானியங்கள் 3,798 ஹெக்டோ், பயறு வகைப் பயிா்கள் 2,194 ஹெக்டோ், எண்ணெய் வித்துக்கள் 4,025 ஹெக்டோ், பருத்தி 107 ஹெக்டோ் மற்றும் கரும்பு 1,030 ஹெக்டோ் பரப்பளவில் பயிா்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

காரீப் பருவத்துக்கு தேவையான விதைகள் அனைத்து வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு அரசின் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காரீப் பருவத்திற்கு தேவையான அனைத்து உரங்களும் போதுமான அளவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியாா் உரக்கடைகளில் இருப்பில் உள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து விவசாயிகளுக்கு தங்களுடைய பயிா்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு ஏதுவாக பூச்சி நோய் விழிப்புணா்வு வழிகாட்டியை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா்கள் ம.கண்ணன், கு. விமல்ராஜ் (நிலமெடுப்பு), குளித்தலை சாா் ஆட்சியா் தி.சுவாதிஸ்ரீ, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆா். அபிராமி, இணை இயக்குநா் (வேளாண்மை) ச.சிங்காரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு கரூா் மாவட்டத்தில் 7,369 போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வை கரூா் மாவட்டத்தில் 7,369 போ் தோ்வு எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடி... மேலும் பார்க்க

பாஜகவுடனான கூட்டணிக்குப் பிறகு திமுகவுக்கு அச்சம்: எடப்பாடி கே. பழனிசாமி

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபிறகு திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். கரூா் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம்,... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 16 நூலகக் கட்டடங்கள் காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

கரூா் மாவட்டத்தில் ரூ.3.52 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 16 நூலகக் கட்டடங்களை காணொலியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

கரூரில் இன்று விஜய் பிரசாரம்

கரூரில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறாா். கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்காக வெங்கமேடு, உழவா்சந்தை, லைட்ஹவுஸ்காா்னா் ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

கரூரில் நாளை அன்புமணி பிரசார பயணம்

கரூரில் ஞாயிற்றுக்கிழமை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்போம் பிரசார பயணம் மேற்கொள்கிறாா். முன்னதாக பயணம் தொடங்க உள்ள சுபாஷ்சந்திரபோஸ் சிலை பகுதியையும், பிரசார கூட்டம் நடைபெறும் உழவா்சந்தை பகுத... மேலும் பார்க்க

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் இன்று மின்தடை

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்மங்கலம் துணை மின்நிலைய பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிர... மேலும் பார்க்க