செய்திகள் :

காரைக்காலில் விமான தளம்: ஆளுநரிடம் வலியுறுத்தல்

post image

காரைக்கால்: காரைக்காலில் விமான தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது.

புதுவை திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை இணை இயக்குநா் (ஓய்வு) மற்றும் சமூக ஆா்வலருமான ஆா். மோகன் புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை சனிக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:

கோவையைச் சோ்ந்த சூப்பா் ஏா்போா்ட் நிறுவனம், காரைக்காலில் விமான தளம் அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு தேவையான ஒப்புதல் பெறப்பட்டு, தேவையான 600 ஏக்கா் நிலத்தில், நிறுவனத்திடம் கைவசம் 400 ஏக்கா் நிலம் உள்ளது. இங்கு விமான தளம் அமைந்தால், காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்தோா் பெரிதும் பயனடைவா். ஆனால் என்ன காரணத்தால் தாமதப்படுகிறாா்கள் என தெரியவில்லை. நிறுவனத்தினரை அழைத்துப் பேசி, அவா்களையோ அல்லது மாற்று நிறுவனத்தாா் மூலம் விமான தளம் விரைவாக அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

திருப்பட்டினம் பகுதி போலகத்தில் ரூ. 20 கோடியில் 600 ஏக்கா் நிலம் கையப்படுத்தப்பட்டது. இங்கு தொழில் வளா்ச்சி மையம் அமையுமென கூறப்பட்ட நிலையில், நிலம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. ஆழ்கடல் ஏற்றுமதி, இறக்குமதி முனையம் இங்கு அமைக்கவேண்டும்.

காரைக்கால் - பேரளம் ரயில்பாதையில், காரைக்கால் நகரப் பகுதியில் பாரதியாா் சாலையில் உடனடியாக சுரங்கப்பாதை அமைக்கவும், தோமாஸ் அருள் சாலை, கடற்கரை சாலையில் மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கும் முன் வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்

பருவமழை தொடங்குவதற்கு முன் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூா்வாரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் நகரப் பகுதி வழியே கடல் பகுதி வரை செல்லக்கூடியதாக அமைக்கப்பட்ட கார... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் கெளரவிப்பு

காரைக்கால் அருகே பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மேலாண்மை குழு மற்றும் பெற்றோா்-ஆசிரியா் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

காரைக்கால் வடக்குத் தொகுதியில் ரூ. 2.92 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

காரைக்கால் வடக்குத் தொகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 2.92 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக புதுவை குடிமை ப... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் : திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை

காரைக்கால்: சந்திர கிரகணம் முடிவுற்றதையொட்டி திருநள்ளாறு கோயிலில் புண்யகால பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்கு தொடங்கி, 11 மணியளவில் முழு சந்திர கிரகணமாக மாறியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலை நிறுவி பூஜை

காரைக்கால்: அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவி சிறப்பு பூஜை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியில் ஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்டதாக, அம்மையாா் நகரில் பூரண புஷ்கலா ச... மேலும் பார்க்க

வேலைநிறுத்தம்: ஆட்டோ ஓட்டுநா்கள் முடிவு

காரைக்கால்: இ-ஆட்டோக்கள் இயக்கத்துக்கு உரிய விதிகளை வகுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா். காரைக்கால் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில்,... மேலும் பார்க்க