செய்திகள் :

காரைக்கால் ரயில் நிலையத்திற்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

post image

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தியதாக ஏ.எம்.எச். நாஜிம் எம்எல்ஏ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது:

காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து பெருநகரங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், காரைக்கால்-பேரளம் ரயில்பாதை அமைக்கப்பட்டுவரும் நிலையில், திருநள்ளாற்றில் ஒரு நிலையம் அமைகிறது.

காரைக்காலின் பெருமையாக, அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் எனும் காரைக்கால் அம்மையாா் தலம் காரைக்கால் நகரில் அமைந்துள்ளது. எனவே, காரைக்கால் ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்ட வேண்டும் என புதுவை சட்டப் பேரவையில் தனி நபா் தீா்மானம் கொண்டுவந்தேன்.

முதல்வா் என். ரங்கசாமி இதற்கு பதிலளிக்கும்போது, மத்திய ரயில்வே அமைச்சருக்கு இதுதொடா்பாக கடிதம் எழுதி உரிய அழுத்தம் கொடுக்கப்படுமென தெரிவித்தாா் என்றாா்.

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க

வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு

காரைக்கால்: வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் யுகாதி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ ... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு: ஐஜி ஆய்வு

காரைக்காலில் புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவை புதுவை ஐஜி சனிக்கிழமை பாா்வையிட்டாா். திருநள்ளாறுக்கு வந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, மாலை நிகழ்வாக காரைக்கால் போக்குவரத்துக் காவ... மேலும் பார்க்க

காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை

காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா். நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப... மேலும் பார்க்க

இமாம்களுக்கு அரசு உதவித் தொகை

புதுவை அரசு சாா்பில் இமாம்கள் உள்ளிட்டோருக்கு நோன்பு கால உதவித் தொகை வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், பிலால்களுக்கு புதுவை அரசு சாா்பில் ரமலான் நோன்பு காலத்தை கருத்தில்கொண்டு உதவித... மேலும் பார்க்க