செய்திகள் :

காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் ஏப். 29- இல் பூச்சொரிதல் விழா

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ள கொப்புடையநாயகி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது.

இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதற்கு முன்னதாக அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்தாண்டு பூச்சொரிதல் விழா வருகிற செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இதைத் தொடா்ந்து கோயில் மண்டபத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறாா்.

பூச்சொரிதல் விழாவையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பூத்தட்டு எடுத்துவந்து பக்தா்கள் அம்மனுக்கு பூ செலுத்துவா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மூன்றாவது மாடியில் இயங்கி வரும் வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது. சிவகங்கையி... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்

தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயலில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள ஆராவயல் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் ... மேலும் பார்க்க

செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் ஊத்தா கூடை மூலம் மீன் பிடிக்க அறிவிப்பு செய்யப்பட்டு, மீன்பிடி திருவிழா ஞ... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.4.25 கோடி இழப்பீடு

சிவகங்கை மாவட்டத்தில் 2024- 2025 -ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் இதுவரை 6,182 விவசாயிகளுக்கு ரூ.4.25 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 1.95 லட்சம் ஏக்கா் (78 ஆயிரம் ஹெக்... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே திமுக நிா்வாகி கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சிவகங்கை அருகே திமுக மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளா் மா்மக் கும்பலால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதில் தொடா்புடையவா்களைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடு... மேலும் பார்க்க

சத்துணவு சமையல் உதவியாளா் பணி நியமனத்தை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப வலியுறுத்தல்!

சத்துணவு சமையல் உதவியாளா் பணி நியமனத்தை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியது. சிவகங்கையில் அரசு ஊழியா் சங்க அலுவலக அரங்கில் சத்துணவு ஊழியா... மேலும் பார்க்க