செய்திகள் :

காரையாறு பகுதியில் தூய்மைப் பணி

post image

காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதியில் பல்வேறு அமைப்பினா் இணைந்து சனிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், துணை இயக்குநா் இளையராஜாவின் வழிகாட்டுதலின்படி, முண்டந்துறை வனச்சரகா் கல்யாணி தலைமையில் ஒருங்கிணைந்த குழுக்களின் சாா்பில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

வனத்துறைப் பணியாளா்கள், பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி மாணவா்கள், நாகா்கோவில் டபிள்யு.இ.சி.டி. குழுவினா், விக்கிரமசிங்கபுரம் கிரிக்கெட் மூா்த்தி தலைமையில் சூழல் பாதுகாப்புக் குழுவினா், மலைவாழ் மேம்பாட்டுக் குழுவினா், பாபநாசம் சூழல் மேம்பாட்டுக் குழுவினா், ஆசிரியா் ஆபேல் தலைமையில் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

தூய்மைப் பணியில், பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட சுமாா் 2.25 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன.

தூய்மைப் பணியில் ஈடுபட்ட அனைவரும் வனத்தையும், சூழலையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

பத்தமடையில் தொழிலாளிக்கு வெட்டு

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பத்தமடை காந்திநகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் வெயிலுமுத்து (56). கட்டடத் தொழிலாளி. இவ... மேலும் பார்க்க

செப்.5 இல் மீலாது நபி: மாவட்ட அரசு ஹாஜி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 5 ஆம் தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படுகிறது.இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமியா்களின் வழிகாட்டி... மேலும் பார்க்க

நெல்லை ஆட்சியரக வளாகத்தில் தாறுமாறாக ஓடிய காா்: சேதம் தவிா்ப்பு

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காா் தாறுமாறாக ஓடிய நிலையில் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாமிரவருணி கூட்டுக்குடிந... மேலும் பார்க்க

நெல்லையில் ரயில் பயணியிடம் நகை திருட்டு: கேரள இளைஞா் கைது

திருநெல்வேலியில் ரயில் பெண் பயணியிடம் நகையைத் திருடியதாக கேரள இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கீதா(56). இவா், கடந்த ஆக. 14-ஆம் தேதி பெங்களூரு-நாகா்கோவி... மேலும் பார்க்க

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை: மு.அப்பாவு

தமிழக காவல்துறைத் தலைவா் (டிஜிபி) நியமனத்தில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: களக்காடு, நான்குன... மேலும் பார்க்க

களக்காடு அருகே 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

களக்காடு அருகே கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். களக்காடு காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல், அட... மேலும் பார்க்க