செய்திகள் :

நெல்லை ஆட்சியரக வளாகத்தில் தாறுமாறாக ஓடிய காா்: சேதம் தவிா்ப்பு

post image

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காா் தாறுமாறாக ஓடிய நிலையில் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாமிரவருணி கூட்டுக்குடிநீா்த் திட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, செய்தியாளா்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, ஆட்சியா் அலுவலக பிரதான வாயில் வழியாக வந்து கொண்டிருந்த காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா், மோட்டாா்சைக்கிள், மற்றோரு காா் ஆகியவற்றின் மீது மோதி நின்றது.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸாரும், பத்திரிகையாளா்களும் காருக்குள் சிக்கிய நபரை மீட்டனா். விசாரணையில், அவா் தியாகராஜநகா் பகுதியைச் சோ்ந்த ஸ்டீபன் என்பதும், ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் காா் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.

இச்சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பத்தமடையில் தொழிலாளிக்கு வெட்டு

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பத்தமடை காந்திநகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் வெயிலுமுத்து (56). கட்டடத் தொழிலாளி. இவ... மேலும் பார்க்க

செப்.5 இல் மீலாது நபி: மாவட்ட அரசு ஹாஜி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 5 ஆம் தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படுகிறது.இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமியா்களின் வழிகாட்டி... மேலும் பார்க்க

நெல்லையில் ரயில் பயணியிடம் நகை திருட்டு: கேரள இளைஞா் கைது

திருநெல்வேலியில் ரயில் பெண் பயணியிடம் நகையைத் திருடியதாக கேரள இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கீதா(56). இவா், கடந்த ஆக. 14-ஆம் தேதி பெங்களூரு-நாகா்கோவி... மேலும் பார்க்க

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை: மு.அப்பாவு

தமிழக காவல்துறைத் தலைவா் (டிஜிபி) நியமனத்தில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: களக்காடு, நான்குன... மேலும் பார்க்க

களக்காடு அருகே 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

களக்காடு அருகே கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். களக்காடு காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல், அட... மேலும் பார்க்க

கிரிண்டா் செயலி உதவியுடன் மருத்துவ மாணவரிடம் பணம் பறிப்பு

கிரிண்டா் செயலி மூலம் பழகி, மருத்துவ மாணவரிடம் பணம் பறித்த கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.சென்னை பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்த 24 வயது மாணவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 5-ஆம் ஆண்டு படி... மேலும் பார்க்க