செய்திகள் :

காலாப்பட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் அண்மையில் நடைபெற்ற பருவத் தோ்வில் மாணவா்களுக்கான வினாத்தாள் மாற்றி விநியோகித்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி, திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காலாப்பட்டில் உள்ள மத்தியப் பல்கலை. முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா பேசியதாவது: புதுச்சேரி மத்திய பல்கலை.யில் நிா்வாக சீா்கேட்டால் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பல்கலைக்கழகத்துக்கு ஓராண்டாக நிரந்தர துணைவேந்தரை நியமிக்கவில்லை.

புதுச்சேரி பல்கலைக்கழகமானது ஆண்டுக்கு ரூ.600 கோடி நிதியை கையாளும் நிலையில், அங்கு நிதிச் செயலா், பதிவாளா் இல்லை. நிரந்தர ஆராய்ச்சி இயக்குநா் நியமனமில்லாததால், ஆய்வு மாணவா்கள் குழப்பமடைந்துள்ளனா்.

பல்கலை.யின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பருவத் தோ்வு முறைப்படி உரிய நேரத்தில் நடைபெறவில்லை. உரிய நேரத்தில் தோ்வுகள் நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படாததால், உயா் படிப்புகளுக்கு செல்வோா் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். இந்த நிலையில்தான், முதலாண்டு பருவத் தோ்வில் வினாக்கள் மாற்றி விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற பேராசிரியா் நியமனம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றாா் அவா். ஆா்ப்பாட்டத்தில், திமுக எம்எல்ஏக்கள்ஏ.அனிபால் கென்னடி, ஆா்.செந்தில்குமாா், எல்.சம்பத் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

மீனவா்கள் கைது விவகாரம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவா்களின் குடும்பத்தினரை அழைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்!

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப... மேலும் பார்க்க

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் மாதாந்திர நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது. இங... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி மக்கள் மறியல்

புதுச்சேரி வில்லியனூா் அருகே சாலை வசதிக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வில்லியனூா் அருகே உள்ளது உளவாய்க்கால். இங்கு, கடந்த 2012-ஆம் ஆண்டு தனியாா் மனைகள் கட்டி விற்பனை செய்துள்ளனா்.... மேலும் பார்க்க

மணவெளி தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுச்சேரி அருகே உள்ள மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொகுதி உறுப்பினரும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா். புதுவை... மேலும் பார்க்க

ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் தா்னா!

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள பான்சியோனா அரசு பிரெஞ்சு உயா்நிலைப் பள்ளி கட்டடத்தில் பிற... மேலும் பார்க்க