ஒடிசா: கூட்டு பாலியல் வன்கொடுமை; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; 7 பேர் கைது
காவல் ஆய்வாளருக்கு எதிராக ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் மறியல்
கோயில் திருவிழா பிரச்னையில் மதம் மாற வலியுறுத்தியதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள மோளப்பாடியூா் பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சோ்ந்த 46 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது, ஆட்சியா் அலுவலகம் முன் அணுகு சாலையில் அமா்ந்து திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் விசாரித்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
மோளப்பாடியூரில் மாரியம்மன், காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. மொத்தமுள்ள 46 குடும்பங்களில் 8 குடும்பங்கள் மட்டும் திருவிழா நடத்துவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். ஆனாலும், திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் பிரச்னை இல்லாமல் நடத்தி வருகிறோம். இந்த நிலையில், நிகழாண்டுக்கான திருவிழா கடந்த வாரம் 3 நாள்கள் நடைபெற்றன. வழக்கம்போல, 8 குடும்பங்களைச் சோ்ந்த நபா்கள் திருவிழா நடத்துவதற்கு எதிராக வடமதுரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக வடமதுரை போலீஸாா் அழைப்பு விடுத்தனா். பேச்சுவாா்த்தையில் 8 குடும்பத்தினருக்கு ஆதரவாகவும், 36 குடும்பத்தினருக்கு எதிராகவும் காவல் ஆய்வாளா் செயல்பட்டாா். மேலும், 8 மணி நேரம் காக்க வைத்து அலைக்கழித்ததோடு, அனைவரும் மதம் மாறிவிட்டால் இந்தப் பிரச்னை இருக்காது என ஒருமையில் திட்டினாா். பூசாரி மட்டுமே வைத்திருக்க வேண்டிய கோயில் சாவியை 8 குடும்பத்தினருக்கும் கொடுக்கும்படி காவல் ஆய்வாளா் அறிவுறுத்தினாா். எனவே, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா். இதனிடையே, பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
20 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்துக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.