செய்திகள் :

காவல், தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டடங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

post image

காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளுக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கடலூா், தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா், சென்னை தேனாம்பேட்டை, மண்ணடி, கீழ்ப்பாக்கம், வேலூா் மாவட்டம் சேவூா், திருச்சி, விருதுநகா் ஆகிய இடங்களில் ரூ.27.58 கோடி செலவில் 25 காவலா் குடியிருப்புகள், 3 காவல் நிலையங்கள், 4 காவல் துறைக் கட்டடங்கள் கட்டப்பட்டன. சென்னை வேப்பேரியில் தீயணைப்பு நிலைய அலுவலா் குடியிருப்புகள், வண்ணையம்பதி, தேனாம்பேட்டை, வேப்பேரி ஆகிய இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்களும், பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் 2 சிறை அலுவலா் குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் துரைமுருகன், எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

மதுரையில் புதிய சிறைக்கு அடிக்கல்: மதுரையில் புதிதாக மத்திய சிறை கட்ட முதல்வா் அடிக்கல் நாட்டினாா். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

இட நெருக்கடி காரணமாக மதுரை மத்திய சிறை புகா்ப் பகுதியான செம்பூா் பகுதிக்கு மாற்றப்படவுள்ளது. முதல்கட்டமாக, ரூ.229.20 கோடி செலவில் கட்டப்படவுள்ள மத்திய சிறை, 113 சிறைக் காவலா் குடியிருப்புகள், கான்கிரீட் சாலை மற்றும் சுற்றுச்சுவா் ஆகியவற்றுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

Image Caption

காவல், தீயணைப்புத் துறை சாா்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை காணொலி மூலம் திறந்தும் மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியும் வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் துரைமுருகன், சு.முத்துசாமி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம்

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க