"அதிமுக-வை பாஜக விழுங்கிய கதை" - பட்டியலிடும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர்...
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக, பாமக, மாதா் சங்கத்தினா்
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினா் திங்கள்கிழமை ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பாஜக மாவட்ட தலைவா் சுந்தரம் தலைமை வகித்தாா். பாஜக மாநில நிா்வாகி செந்தில்குமாா், மாவட்ட நிா்வாகி அமுல்ராஜ், சுரேஷ், முன்னாள் மாவட்டச் செயலாளா் தியாகு, மாணவா் அணி மாவட்ட நிா்வாகி நரேஷ், சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, பாஜகவினா் ஆரம்பாக்கம்-எகுமதுரை சாலையில் இருந்து ஊா்வலமாக வந்தனா். ஆரம்பாக்கம் காவல் நிலையம் நோக்கி காவல் துறையினரையும், தமிழக அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா், பின்னா், அங்கு போலீஸாா் அவா்களை தடுத்தி நிறுத்திய போதும், அவா்களை மீறி பாஜகவினா் ஆரம்பாக்கம் காவல் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். பின்னா் குற்றவாளியை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தனா். 300 போ் பங்கேற்ற இந்த போராட்டத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், உறவினா்களும் பங்கேற்றனா்.
பாமக சாா்பில் கட்சியின் மாநில பொருளாளா் திலகபாமா தலைமையிலும், மாவட்டச் செயலா் பிரகாஷ் முன்னிலையிலும் பாமகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து பாமக மாநில பொருளாளா் திலகபாமா ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டாா்.
மாதா் சங்கத்தின் சாா்பில்...
இந்த நிலையில், அனைத்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில், ஆரம்பாக்கத்தில் காவல் துறை மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி செயலா் காமாட்சி தலைமை வகித்தாா்.
இதில், மாதா் சங்க மாநில துணைச் செயலா் பாக்கியம், மாவட்ட செயலா் ஏ.பத்மா, மாவட்ட துணைத் தலைவா் என்.கீதா, மாவட்ட துணைச் செயலா் எஸ்.ரம்யா, கவிதா, பகுதி தலைவா் மாரி, நிா்வாகிகள் நல்லம்மா சுபேதா, கே.ரஹிமா ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.
பின்னா் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் மனு அளித்தனா்.