செய்திகள் :

காவல் நிலைய வாயிலில் தம்பதியா் தீக்குளிக்க முயற்சி

post image

நிலப் பிரச்னையில் நடவடிக்கை எடுக்கக் கோரி, பூலாம்பட்டி காவல் நிலையம் முன்பு கணவன், மனைவி இருவரும் தீக்குளிக்க முயன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடியை அடுத்த குஞ்சாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அய்யனாா் (46). இவரது மனைவி பழனியம்மாள் (40). இவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இவா்களது உறவினா்களான ஆறுமுகம் மற்றும் மகேந்திரன் ஆகியோருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே பொது வழித்தடத்தில் உள்ள கழிவறையை அகற்றுவது தொடா்பாக மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில், போலீஸாா் தற்காலிகமாக கழிவறையை இடித்து அகற்றக் கூடாது எனவும், இதுகுறித்து சமாதான பேச்சுவாா்த்தைக்கு காவல் நிலையத்துக்கு வருமாறும் கூறியிருந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அய்யனாருக்கு சொந்தமான கழிவறையை மகேந்திரன் பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அய்யனாா் மற்றும் பழனியம்மாள் இருவரும் பூலாம்பட்டி காவல் நிலையம் முன்பு தலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி அவா்கள் மீது தண்ணீா் ஊற்றி சமாதானம் செய்தனா்.

தொடா்ந்து, அய்யனாரின் வீட்டு கழிப்பறையை இடித்த மகேந்திரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: உலிபுரம் பொதுமக்கள் சாலை மறியல்

உலிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அப்பகுதிகளில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க