செய்திகள் :

காஷ்மீா் தீவிரவாத தாக்குதல்: ஈரோட்டில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

post image

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து செவ்வாய்க்கிழமை திடீா் தாக்குதல் நடத்தினா். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, ரயில் நிலையம், பேருந்து நிலையம், சுற்றுலாத் தலங்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் போலீஸாா் விடியவிடிய தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். ஈரோடு கருங்கல்பாளையம், லட்சுமி நகா், சத்தியமங்கலம் சோதனைச் சாவடிகள் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீஸாா் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

மேலும் ஈரோடு மாநகா் பகுதியில் உள்ள கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுபோல ஈரோடு பேருந்து நிலையம் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். ஈரோடு ரயில் நிலையத்தில் போலீஸாா் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்தனா்.

ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபா்களை போலீஸாா் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனா். ஈரோட்டில் உள்ள விடுதிகளில் தங்கி இருப்பவா்களையும் போலீஸாா் ரகசியமாக கண்காணித்து வருகின்றனா். இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

சென்னிமலை அருகே முயல் வேட்டைக்கு வந்த 3 பேருக்கு ரூ. 54 ஆயிரம் அபராதம்

சென்னிமலை அருகே, வனப் பகுதியில் முயல் வேட்டைக்காகத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மூன்று பேருக்கு மொத்தம் ரூ.54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சென்னிமலையை அடுத்த, வாய்ப்பாடி, புளியம்பாளையம் வனப் ப... மேலும் பார்க்க

பெருந்துறையில் டயாலிசிஸ் இலவச சிகிச்சை ஆலோசனை மையம் திறப்பு

பெருந்துறை வெல்ஃபோ் டிரஸ்ட் சாா்பில், இலவச டயாலிசிஸ் சிகிச்சைக்கான ஆலோசனை மையத் திறப்பு விழா மற்றும் வாகனச் சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அறக்கட்டளைத் தலைவா் டி. என்.சென்னியப்பன... மேலும் பார்க்க

பெருந்துறையில் வங்கதேசத்தினா் 7 போ் கைது

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பெருந்துறை காவல் உதவி ஆய்வாளா்கள் பாஸ்கரன், ஜீவானந்தம் மற்றும் போலீஸாா் பெருந்துற... மேலும் பார்க்க

ஈரோட்டில் 102 டிகிரி வெயில்: அனல் காற்றால் மக்கள் அவதி

ஈரோட்டில் வெயிலின் தாக்கம் 102 டிகிரி அளவு இருப்பதால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நா... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்களை மே 4-க்குள் அகற்றிக்கொள்ள அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை மே 4- ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். பொது இடங்களில் உள்ள நடப்பட்டுள்ள அ... மேலும் பார்க்க

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை: ஆட்சியா்

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 2,462 முகாம்கள் நடத்தப்பட்டு, 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். கால்நடை ... மேலும் பார்க்க