செய்திகள் :

காஸாவிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தாயகம் திரும்பினர்

post image

பாங்காக் : காஸாவிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தாயகம் திரும்பியுள்ளனர்.

பாலஸ்தீன மக்கள் பெரும்பான்மையாக வாழும் காஸாவில், இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீன ஆயுதப் படையான ஹமாஸ் படைப் பிரிவுக்கும் இடையிலான சண்டை, அண்மையில் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலிலிருந்து பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மக்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேர் காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் கடந்த ஜன. 30-ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில்,அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றடைந்தனர். இஸ்ரேலிலிருந்து அவர்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம், பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இன்று(பிப். 9) காலை வந்திறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ... மேலும் பார்க்க

நோக்கியா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்! என்ன காரணம்?

நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை(பிப். 10) அறிவித்துள்ளார்.பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்க... மேலும் பார்க்க

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம்: டிரம்ப்

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.மேலும், இடித்து தரைமட்டமாக்க வேண்டிய பகுதியாக காஸா இருப்பதாக அவர் வெளியிட்ட கருத்து பெரும் அதிர்வ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளாா். பாகிஸ்தானில் ஊழல் வழக்... மேலும் பார்க்க

முஜிபுா் ரெஹ்மான் இல்லம் சூறை, இந்தியாவின் கருத்து தேவையற்றது: வங்கதேசம்

வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுா் ரெஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது தொடா்பாக இந்தியா கூறிய கருத்து தேவையற்றது என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்ற... மேலும் பார்க்க

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்தாா். அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான ராஜீய உறவை வடகொரியா ... மேலும் பார்க்க