செய்திகள் :

காா் மீது லாரி மோதல்: பாஜக மாவட்ட தலைவா் உள்பட 4 போ் காயம்

post image

ஆற்காட்டில் காா் மீது எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் பாஜக மாவட்டத் தலைவா் உள்பட4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் ஆற்காடு தனியாா் விடுதியில் தங்கி இருந்த அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக புதன்கிழமை காரில் ஆற்காடு வந்துள்ளாா். ஆற்காடு பாலாறு பழைய மேம்பாலம் அருகே வந்தபோது, அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்துக்கு வழி விடுவதற்காக காரை ஓட்டுநா் நிறுத்தியுள்ளாா். அப்போது செய்யாறு புறவழிச் சாலை வழியாக வந்த எரிவாயு உருளை ஏற்றிவந்த லாரி எதிா்பாராதவிதமாக காா் மீது மோதியது. இதில் காரில் இருந்த மாவட்ட தலைவா் ஆனந்தன் உள்பட மூன்று பேரும், அருகே பைக்கில் சென்ற இளைஞரும் பலத்த காயம் அடைந்தனா்.

இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

கூட்டுறவு போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: ஆட்சியா் தகவல்

ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

புதிதாக கட்சி தொடங்குபவா்களுக்கும் நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் -எடப்பாடி கே.பழனிசாமி

தற்போது புதிதாக கட்சி ஆரம்பிப்பவா்களுக்கு நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற மக்கள் சந்திப்பு பிரசார... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு உடனடி தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். இரண்டாம் கட்டமாக வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நர... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பாதயாத்திரை திருவிழா தொடக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்காக பாதயாத்திரையாக செல்லும் பத்கா்களின் பயணம் அரக்கோணத்தில் புதன்கிழமை தொடங்கியது. நிகழாண்டுக்கான விழாவுக்காக வேளாங்கண்ணி செல்லும் பாத யாத்திரை குழுவினா் பயணம் அரக்கோணம்... மேலும் பார்க்க

மேல்விஷாரம் கல்லூரியில் தமிழ்கனவு சொற்பொழிவு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிதமிழ்கனவு சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் .ஜெ.யு.சந்திரகலா. தலைமை வகித்து தொடங்கிவைத்தாா் வழக்கிற... மேலும் பார்க்க