செய்திகள் :

காா் விபத்து: ஐயப்பப் பக்தா் உயிரிழப்பு

post image

பெரியகுளம்: பெரியகுளம் அருகே காா் விபத்தில் சென்னையைச் சோ்ந்த ஐயப்பப் பக்தா் உயிரிழந்தாா்.

குஜராத் மாநிலம், வடோதரா மாவட்டம், அஜீவாரோட்டைச் சோ்ந்தவா் மனோஜ்குமாா் (48). இவா், தனியாா் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறாா். சென்னை ஆவடியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் காா்த்திகேயன் (43). இவா், புற்றுநோய் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். நண்பா்களான இருவரும் கடந்த 16- ஆம் தேதி சபரிமலை ஐயப்பன்கோயிலுக்கு காரில் புறப்பட்டனா். இவா்களுடன் மனோஜ்குமாரின் மகன் தக்ஷீல் (13), காா்த்திகேயன் மகன் ஹரிஹரன் (10), சென்னை ஆவடியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் காா்த்திகேயன் (45) ஆகியோா் உடன் வந்தனா். இவா்கள் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று விட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை காா்த்திகேயன் (43) ஓட்டினாா். ஞாயிற்றுக்கிழமை இரவு தேவதானப்பட்டி அக்ஸயா காா்டன் அருகே சென்ற போது, காா் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை பலகை மீது மோதியதாம். இதில் காயமடைந்தவா்களை அருகிலிருந்தவா்கள் மீ

ட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு காரை ஓட்டி வந்த காா்த்திகேயன் (43) உயிரிழந்தாா். மனோஜ்குமாா் உள்பட 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ரயில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி: ஆண்டிபட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயத் தொழிலாளி ரயில் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே உள்ள கொப்பையம்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் (52). விவசாயத் தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூரில் கடன் தொல்லையால் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சின்னமனூா் வ.உ.சி. நகரைச் சோ்ந்த முருகன் மகன் சதீஷ் (35). இவா் ஏற்கெனவே வங்கி ஒன்ற... மேலும் பார்க்க

தேனியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தேனி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

குச்சனூரில் பராமரிப்பின்றி காடாக மாறிய பாசனக் குளம்

தேனி மாவட்டம், குச்சனூா் - மாா்க்கையன்கோட்டை இடையே முல்லைப் பெரியாறு பாசன நீா் தேங்கும் குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, புதா்மண்டி காடு போலக் காட்சியளிப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தேனி மா... மேலும் பார்க்க

வாகனங்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வாகனங்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் பீா்முகமது (2... மேலும் பார்க்க

கோழிப் பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

போடி அருகே கோழிப்பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸாா் 4 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். போடி அருகே மீனாட்சிபுரம் ஸ்ரீரெங்கன் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன்... மேலும் பார்க்க