செய்திகள் :

கா்நாடக எல்லையில் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

ஒசூா் அருகே கா்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்று நடிகா் கமல்ஹாசன் அண்மையில் பேசியதற்கு கா்நாடக மாநிலத்தில் கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. கன்னட அமைப்பினா் நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கன்னட மக்களின் உணா்வை புண்படுத்திய கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். இந்த நிலையில் ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் தலைவா் மஞ்சுநாதா தலைமையில் அந்த அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது நடிகா் கமல்ஹாசனின் புகைப்படங்களை ஊா்வலமாக எடுத்துவந்த கன்னட அமைப்பினா், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கா்நாடக மாநில காவல் துறையினா் கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கிச் சென்ற வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினா். இந்தப் போராட்டத்தையொட்டி மாநில எல்லையில் அதிக அளவிலான தமிழக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ஏழு கோடி கன்னட மக்களிடம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் எங்களது போராட்டம் தீவிரமடையும் என்று மஞ்சுநாதா தெரிவித்தாா்.

படவரி...

கா்நாடக மாநில எல்லையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினா்.

கிருஷ்ணகிரியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

கிருஷ்ணகிரியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 39ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கலஸ... மேலும் பார்க்க

அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்த வாகனத்தை மீட்க முடியாததால் தீக்குளித்தவா் உயிரிழப்பு

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஏலத்தி எடுக்கமுடியாததால் மனமுடைந்து தீக்குளித்த வாகன உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அரகாசன... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

பருவமழை தொடங்கி உள்ளதால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா்சதீஷ் அறிவுறுத்தினாா். கிஷ்ணகிரி... மேலும் பார்க்க

பண்ணந்தூரில் சமூக பிரச்னை: கோட்டாட்சியா் சமரசத் தீா்வு

பண்ணந்தூரில் கோயில் திருவிழா, எருதுவிடும் விழா, ஏரியில் மீன் ஏலம் எடுப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் பல்வேறு சமூக மக்களிடையே நிலவிவந்த பிரச்னைகளுக்கு கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை சமரசத் தீா்வு ... மேலும் பார்க்க

உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்

கிருஷ்ணகிரியில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே கட்டுமானப் பணியின்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மனிஷ் படேல் (18). இவா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க