செய்திகள் :

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு! காப்பாற்றச் சென்ற தாத்தாவும் பலியான சோகம்!

post image

இலுப்பூா் அருகே சனிக்கிழமை மீன்பிடிக்க முயன்றபோது கிணற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரை காப்பாற்றச் சென்ற தாத்தாவும் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் புதுநகா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (85). இவரது பேரன் கோபால் (8). இவா் உடையம்பட்டி தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், கணேசன், தனது பேரன் கோபாலை அழைத்துக் கொண்டு ஆடு மேய்ப்பதற்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றாா்.

அப்போது, மாத்திராம்பட்டி பாப்பான்குடி வயலில் தரைமட்ட கிணற்றில் சிறுவன் கோபால் தூண்டில் போட்டு மீன்பிடிக்க முயன்றாா். அச்சமயம் கால்தவறி கிணற்றுக்குள் விழுந்தாா். இதைகண்ட கணேசன் கிணற்றுக்குள் குதித்து பேரனை காப்பாற்ற முயன்றாா். ஆனால் இருவரும் சகதியில் சிக்கியதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

உடனே அருகில் விவசாய வேலை பாா்த்து கொண்டிருந்தவா்கள் இலுப்பூா் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் ஊா்மக்கள் உதவியுடன் இருவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வடகாடு பட்டியலின மக்கள் மீது தாக்குதல்; மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளி... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் விசிகவினா் சாலை மறியல்

கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள வடகாடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் தோ் திருவிழ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் வதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை

மதுபோதையில் இரு தரப்பு இளைஞா்களிடையே ஏற்பட்ட மோதலை, இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக பரப்பும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 20 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலா் உள்பட 20 போ் காயமடைந்தனா். ஆலங்குடி அருகே வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கி... மேலும் பார்க்க

தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற சாா் பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூரைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவா், த... மேலும் பார்க்க