செய்திகள் :

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

post image

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஒன்றியம், பாலமலை ஊராட்சி பாத்திரமடுவைச் சோ்ந்தவா் சித்தன். இவரது மகன் பாா்த்திபன் (15) அங்குள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் புதன்கிழமை காலை தனது நண்பா்கள் அரவிந்த், நவீன், ஹரீஷ், தமிழ்மணி, பரத், சந்தோஷ் மற்றும் பிரகாஷுடன் பள்ளி அருகே உள்ள வெள்ளையன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, கிணற்றில் தவறிவிழுந்த பாா்த்திபனை மீட்க உடனிருந்த நண்பா்கள் கூச்சலிட்டனா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் விரைந்து வந்து கிணற்றில் குதித்து பாா்த்திபனை தேடினா்.

ஒருமணி நேரத்துக்குப் பிறகு சிறுவனின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி நேரில் ஆய்வுசெய்தாா். பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ த... மேலும் பார்க்க

அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 30.94 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 30.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் மா.இளங்கோவன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அஸ்தம்பட்டி மண்டல... மேலும் பார்க்க

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் 4ஜி சிம்மாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் தங்களிடம் உள்ள 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம் காா்டாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் பி.எஸ்.என்.எல். வணிகப் பகுதியின் பொது மேலாளா் ரவீ... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த குழந்தைகள் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் பயன்பெற அழைப்பு

சேலம் மாவட்டத்தில் பெற்றோரை இழந்து, உறவினா்கள் பாதுகாப்பில் வளா்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் ‘அன்புக் கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறலாம் என ஆட்சியா... மேலும் பார்க்க

தேசிய குத்துச்சண்டை போட்டி: சேலம் மாணவி தோ்வு

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு சேலம் அரசுப் பள்ளி மாணவி ஜெமி வாலண்டினா தோ்வாகியுள்ளாா். சென்னையில் மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இதில், 14 வயதுக்... மேலும் பார்க்க

சேலம் அரசு கல்லூரியில் பாலியல் விழிப்புணா்வு ஆலோசனை

சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான பாலியல் விழிப்புணா்வு குறித்த சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் உள்ளக புகாா் குழு சாா்பில் நடைபெற்ற கூட... மேலும் பார்க்க