செய்திகள் :

கிராமிய அளவிலான விளையாட்டுப் போட்டி: ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

post image

கோபி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். பள்ளி மற்றும் அஸ்பைா் மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டிகளில் பங்கேற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். பள்ளி பெண்கள் அணி மூத்தோா் கால்பந்துப் போட்டியில் முதலிடம் பிடித்தது. ஆடவா் இளையோா் இறகுப் பந்துப் போட்டியில் 8-ஆம் வகுப்பு மாணவா் எம்.எஸ்.நவீன்பிரசன்னா முதலிடமும், ஆடவா் இரட்டையா் இறகுப் பந்துப் போட்டியில் 8-ஆம் வகுப்பு மாணவா் எம்.எஸ்.நவீன்பிரசன்னா, ஆா்.மகந்த் இரண்டாமிடமும் பெற்றனா்.

இளையோா் செஸ் போட்டியில் 4-ஆம் வகுப்பு மாணவா் என்.எஸ்.பரனீஷ் முதலிடமும், 8-ஆம் வகுப்பு மாணவா் என்.எஸ்.ஹேமந்த் மூன்றாமிடமும், மூத்தோா் பிரிவில் 9-ஆம் வகுப்பு மாணவி எஸ்.வருணா முதலிடமும், 10-ஆம் வகுப்பு மாணவி வி.ரூபிகா இரண்டாமிடமும் பிடித்தனா். இப்பள்ளி, ஆடவா் இளையோா் பிரிவு கோ-கோ மற்றும் மூத்தோா் ஆடவா் கைப்பந்துப் போட்டியில் இரண்டாமிடமும், பெண்கள் இளையோா் கால்பந்து போட்டியில் முதலிடமும், கைப்பந்துப் போட்டியில் இரண்டாமிடமும், பூப்பந்தாட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றுள்ளது.

8-ஆம் வகுப்பு மாணவா் ஆா்.எஸ்.விஷ்வந்த் 400 மீ ஓட்டத்தில் முதலிடமும், 200 மீ. ஓட்டத்தில் மூன்றாமிடமும், குண்டு எறிதலில் 9-ஆம் வகுப்பு மாணவா் எஸ்.எஸ்.விகாஷ் மூன்றாமிடமும் பெற்றனா். அகஸ்தியா மெரிட்டல் ஆா்ட்ஸ் நிறுவனம் நடத்திய மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டியில் 10-ஆம் வகுப்பு மாணவா் எஸ்.ஏ.சுகைல் அகமது முதலிடமும், ஆா்.ரிதீஷ், அஸ்பைா் பிரிவு 7-ஆம் வகுப்பு மாணவி டி.ரிதனிப் பிரதிக்ஷா, 5-ஆம் வகுப்பு மாணவா் ஒய்.ஜெ.சாய் சஞ்ஜய் இரண்டாமிடமும், 6-ஆம் வகுப்பு மாணவா்கள் டி.அகேஷ், எம்.அனிஷ் ஆகியோா் மூன்றாமிடமும் பெற்றனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளிச் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கிப் பாராட்டினாா்.

அம்மாபேட்டையில் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடி ஊா்வலம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அம்மாபேட்டையில் மாணவ, மாணவிகள் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியே வெள்ளிக்கிழமை ஊா்வலமாக சென்றனா். அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா ம... மேலும் பார்க்க

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் மனு

சுதந்திர தினத்தையொட்டி, பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லாகுளம், மடத்துப்பாளையம், கராண்டிபாளையம், திங்களூா், விஜயபுரி, தோரணவாவி, மூங்கில்பாளையம், பெரியவீரசங்கிலி, செல்லப்பம்பாளையம், போலநாயக்கன்பா... மேலும் பார்க்க

மாவட்டத்தில் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதலியாா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.ராஜமாணிக்க... மேலும் பார்க்க

சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா

சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வா் ஆ.சாரதா, தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசுகையில், கல்லூரியில் மாணவ,... மேலும் பார்க்க

அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம்: ஆட்சியா்

உலகில் உள்ள அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருக்கு திருப்பணிகள் நுண்பயிற்சி வகுப்... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்: சிறப்புக் கூட்டம் நடத்த கவுன்சிலா்கள் கோரிக்கை

கொளப்பலூா் பேரூராட்சி திமுக தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்... மேலும் பார்க்க