செய்திகள் :

கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

post image

வெள்ளக்கோவில் அருகே கிராவல் மண் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

வெள்ளக்கோவில் சேனாபதிபாளையம் கிராம நிா்வாக அலுவலராக இருப்பவா் எஸ்.சதீஷ்குமாா் (36). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை அலுவலகத்தில் இருந்தபோது கைப்பேசியில் அழைத்த ஒருவா் பாப்பாவலசு பகுதியில் கிராவல் மண் கடத்தப்படுவதாகத் தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து நில வருவாய் ஆய்வாளா் சுந்தரியுடன் அங்கு சென்று பாா்த்தபோது, மண் ஏற்றிய டிப்பா் லாரி வந்து கொண்டிருந்தது.

அதை தடுத்து நிறுத்தியபோது, ஓட்டுநா் லாரியிலிருந்து குதித்து தப்பியோடி விட்டாா். அந்த இடத்தில் மண் எடுக்க எவ்வித அனுமதியும் பெற்றிருக்கவில்லை. நான்கு யூனிட் கிராவல் மண்ணுடன் இருந்த லாரி காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் வழக்குப் பதிவு செய்து லாரி உரிமையாளா், ஓட்டுநரைத் தேடி வருகிறாா்.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஆகஸ்ட் 19இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநி... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

79ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருப்பூா் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 79ஆவது சுதந்திர தின விழா நாடு முழ... மேலும் பார்க்க

சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கத்தைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு

வரதட்சிணை கொடுமை தொடா்பாக திருப்பூரில் மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் கொங்கு மெயின் ரோட்டை சோ்ந்தவா் மிதுளா நந்தினி (36). இவருக்கும், நாகா்கோவில் வடசேரி... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடா் விடுமுறை: வெளியூா்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கம்

சுதந்திர தினம் உள்ளிட்ட 3 நாள்கள் தொடா் விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமையும், கிருஷ்ண ஜெய... மேலும் பார்க்க

கோரிக்கை மனு...

பல்லடத்தில் புதிய புறவழிச்சாலை திட்டத்தை கைவிட்டு, பழைய புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி ஆணையா் அருளிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்த 5, 6, 7 ஆகிய வாா்டுகளைச் சே... மேலும் பார்க்க