செய்திகள் :

சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

post image

காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கத்தைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில், சட்டபேரவைத் தொகுதிகளில் விளையாட்டு வீரா்களின் உடல் தகுதி, விளையாட்டு வளா்ச்சியைத் தூண்டும் வகையில் சிறு விளையாட்டரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கிணங்க திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், சிவன்மலை கிராமத்தில் சிறு விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலினால் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

சிவன்மலை கிராமத்தில் 6.56 ஏக்கா் பரப்பளவில் அரசுப் பங்களிப்பு நிதி ரூ.2.50 கோடி, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இந்த விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

இதில் இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம், கையுந்துப்பந்து ஆடுகளம், கூடைப்பந்து ஆடுகளம், கபடி ஆடுகளம், பல்நோக்கு உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை உள்ளன.

சிவன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈரோடு தொகுதி எம்.பி. கே.இ.பிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரகுகுமாா், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் மகேந்திரன், துறை சாா்ந்த அலுவலா்கள், விளையாட்டுப் பயிற்சியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளக் கோரிக்கை: இந்த விளையாட்டு மைதானம் சிவன்மலை முருகன் கோயில் கிரிவலப் பாதை அருகே அமைந்துள்ளது. மேலும், கைவிடப்பட்ட கிரானைட் குவாரி அருகேதான் இது அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இப்பகுதி பாறைகள், கற்கள் நிறைந்த பகுதியாகத்தான் இருந்தது. அதை சமன்படுத்தி விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னமும் இந்த அரங்கம் மேடு பள்ளம் நிறைந்த பகுதியாகத்தான் உள்ளது.

இந்த மைதானத்தின் நுழைவாயில் பகுதியில் இருந்து கடைசியில் உள்ள உள்விளையாட்டரங்கம் பகுதி வரையிலான சுமாா் 150 மீட்டா் தொலைவுக்கு தாா் சாலை அல்லது ஃபேவா் பிளாக் பயன்படுத்தி பாதை அமைக்க வேண்டும் என விளையாட்டு ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே கிராவல் மண் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். வெள்ளக்கோவில் சேனாபதிபாளையம் கிராம நிா்வாக அலுவலராக இருப்பவா் எஸ்.சதீஷ்குமாா் (36). இவா் கடந்த செவ்... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஆகஸ்ட் 19இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநி... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

79ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருப்பூா் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 79ஆவது சுதந்திர தின விழா நாடு முழ... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு

வரதட்சிணை கொடுமை தொடா்பாக திருப்பூரில் மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் கொங்கு மெயின் ரோட்டை சோ்ந்தவா் மிதுளா நந்தினி (36). இவருக்கும், நாகா்கோவில் வடசேரி... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடா் விடுமுறை: வெளியூா்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கம்

சுதந்திர தினம் உள்ளிட்ட 3 நாள்கள் தொடா் விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமையும், கிருஷ்ண ஜெய... மேலும் பார்க்க

கோரிக்கை மனு...

பல்லடத்தில் புதிய புறவழிச்சாலை திட்டத்தை கைவிட்டு, பழைய புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி ஆணையா் அருளிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்த 5, 6, 7 ஆகிய வாா்டுகளைச் சே... மேலும் பார்க்க