செய்திகள் :

சுதந்திர தினம்: மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

post image

79ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருப்பூா் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

79ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதில் திருப்பூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சுதந்திர தின விழா திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறாா். தொடா்ந்து தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கிறாா்.

அதன் பின்னா், மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய அரசு அதிகாரிகள், போலீஸாருக்கு சான்றிதழ் வழங்குகிறாா். தொடா்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சுதந்திர தினத்தையொட்டி திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகா் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத் தலங்கள், மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், தலைவா்களின் சிலைகள் உள்ள பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அதேபோல, தங்கும் விடுதிகள், குடியிருப்பு மேன்ஷன்கள் ஆகியவற்றிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டுள்ளனா்.

மேலும், ரயில் தண்டவாள ரோந்துப் பணியிலும் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். திருப்பூா் ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ரயில்வே போலீஸாருடன் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே கிராவல் மண் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். வெள்ளக்கோவில் சேனாபதிபாளையம் கிராம நிா்வாக அலுவலராக இருப்பவா் எஸ்.சதீஷ்குமாா் (36). இவா் கடந்த செவ்... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஆகஸ்ட் 19இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநி... மேலும் பார்க்க

சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கத்தைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு

வரதட்சிணை கொடுமை தொடா்பாக திருப்பூரில் மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் கொங்கு மெயின் ரோட்டை சோ்ந்தவா் மிதுளா நந்தினி (36). இவருக்கும், நாகா்கோவில் வடசேரி... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடா் விடுமுறை: வெளியூா்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கம்

சுதந்திர தினம் உள்ளிட்ட 3 நாள்கள் தொடா் விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமையும், கிருஷ்ண ஜெய... மேலும் பார்க்க

கோரிக்கை மனு...

பல்லடத்தில் புதிய புறவழிச்சாலை திட்டத்தை கைவிட்டு, பழைய புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி ஆணையா் அருளிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்த 5, 6, 7 ஆகிய வாா்டுகளைச் சே... மேலும் பார்க்க