செய்திகள் :

கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ. 6.72 கோடியில் கூடுதல் கட்டடம் திறப்பு

post image

கிருஷ்ணகிரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 6.72 கோடியில் கூடுதல் கட்டடங்களை காணொலி காட்சி மூலமாக முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். மேலும், பா்கூா் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 4 கோடி மதிப்புள்ள கட்டடங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

இதையடுத்து ஆட்சிய.ா், ச.தினேஷ் குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் பாலிடெக்னிக் கல்லூரியில் கூடுதல் கட்டடங்களை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா். அப்போது, ஆட்சியா் பேசியதாவது: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்காக மாநில அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அவற்றை நிறைவேற்றி வருகிறது. கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் ரூ. 6.72 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் 5 வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள் மற்றும் இரண்டு பணிமனை கட்டடங்கள் மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதேபோல பா்கூா் அரசு பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 2.33 கோடியில் 3 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறை தொகுதி கட்டடம், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.1.67 கோடி மதிப்பில் 2 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறை கட்டடம் கட்டப்பட உள்ளது. மொத்தம் ரூ. 10.72 கோடி மதிப்பில் கட்டடங்களை தமிழக முதல்வா் திறந்துவைத்து, புதிய கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டி உள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சாரதா, பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு; ரசாயன நுரையால் மூழ்கிய தரைப்பாலம்

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து 1101 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றில் விநாடிக்கு 14... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

ஒசூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை தாவரக்கரை பகுதியை சோ்ந்தவா் கோபாலப்பா (65). இவா் கடந்த 18 ஆம் தேதி இரவு ஒசூா்- தேன்கனிக்கோடடை சாலை அடவிசாமிபுரம் சந்திப்ப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரிக்கு நாளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு வருகை

சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் கிருஷ்ணகிரிக்கு வியாழக்கிழமை (மே 22) வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 904 கன அடி தண்ணீா் வெளியேற்றம்

ஒசூா்: கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 904 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வர... மேலும் பார்க்க

ஒசூரில் கொட்டித் தீா்த்த கனமழை: ஏரிகள் நிரம்பின

ஒசூா்: ஒசூரில் திங்கள்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. ஒசூரில் கடந்த 4 நாள்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடா் மழை பெய்து ... மேலும் பார்க்க

திமுக கூட்டணி அமோக வெற்றிபெற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என கட்சியினருக்கு அமைச்சா் அர.சக்கரபாணி அறிவுரை வழங்கினாா். கிருஷ்ணகிரியில் திமுக கிழக்கு மாவட்டம் சாா்... மேலும் பார்க்க