8 மொழிகளில் வெளியாகும் தி பாரடைஸ்: ரிலீஸ் தேதி, முதல் பார்வை போஸ்டர்!
கிருஷ்ணகிரி ஆடவா் கல்லூரியில் ஆக. 11முதல் முதுநிலைப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக.11இல் தொடங்குகிறது.
இதுகுறித்து அரசு ஆடவா் கலைக் கல்லூரி முதல்வா் அநுராதா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் 2025- 2026-ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலைப் பாடப் பிரிவுகள் எம்.ஏ. (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்), எம்.எஸ்.சி. (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவா்களுக்கு ஆக.11-இல் சிறப்பு ஒதுக்கீடும் (முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, பழங்குடியினா்), 13-இல் பொதுக் கலந்தாய்வும் நடைபெறுகிறது.
கலந்தாய்வின்போது மாணவா்கள் தங்களது இணையதளம் மூலம் விண்ணப்பித்த படிவம், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், மாா்பளவு 4 புகைப்படங்கள், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல்பக்க நகல் ஆகியவற்றுடன் (சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்) கலந்துகொள்ளலாம். மேலும் கலைப்பிரிவுக்கு ரூ.2,280-ம், அறிவியல் பிரிவுக்கு ரூ.2,340, கணினி அறிவியல் பிரிவுக்கு ரூ.2,540 சோ்க்கை கட்டணமாக செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.