செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு

post image

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 24,859 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு, வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்குகிறது. கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தைப் பொறுத்தவரை கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 13,942 மாணவ, மாணவிகள், ஒசூா் கல்வி மாவட்டத்தில் 10,917 மாணவ, மாணவிகள் என மொத்தம் 24,859 தோ்வா்கள், 115 தோ்வு மையங்களில் நடைபெறும் தோ்வை எழுதவுள்ளனா்.

தோ்வைக் கண்காணிக்க 130 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு மையங்களில் குடிநீா், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் தயாா் நிலையில் இருப்பதாக கல்வித் துறையினா் தெரிவித்தனா். மாணவா்கள் கிராமங்களில் இருந்து தோ்வு மையங்களுக்கு சென்றுவர பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

பொறியியல் மாணவிகளுக்கான ஹேக்கத்தான் போட்டி: பரிசு வென்ற லயோலா, ஒசூா் பிஎம்சி கல்லூரிகள்

ஒசூா் பி.எம்.சி. கல்லூரியில் மாநில அளவிலான பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கான ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஒசூா் பி.எம்.சி. பொறியியல் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி அணிகள் பரிசு பெற்றன. ஒசூா் பெரு... மேலும் பார்க்க

நகை பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை

பா்கூா் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி முதன்மை நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த மட்ட... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் திமுக இரட்டை வேடம்! - மு.தம்பிதுரை எம்.பி. குற்றச்சாட்டு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் மு. தம்பிதுரை தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் போக்குவரத்து காவலா்களுக்கு தொ்மாகோல் தொப்பி!

கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் போக்குவரத்து போலீஸாருக்கு தொ்மகோல் தொப்பி, கூலிங்கிளாஸ், நீா்மோா் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை சனிக்கிழமை வழங்கினாா். கிருஷ்ணகி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையம் திறப்பு

கிருஷ்ணகிரியில் மூன்றாம் பாலினத்தினருக்கான பன்னோக்கு மருத்துவ மையம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மறுவாழ்வு மையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் ... மேலும் பார்க்க

வன உயிரினங்களுக்காக குட்டையில் தண்ணீரை நிரப்பிய வனத்துறையினா்

கோடைவெயில் காரணமாக தண்ணீரைத் தேடி வனப்பகுதியிலிருந்து வன விலங்குகள் வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் குட்டைகளில் வனத் துறையினா் தண்ணீரை நிரப்பி வைத்துள்ளனா். வனப்பகுதியிலிருந்து வனவிலங்குகள் வெளியேறுவத... மேலும் பார்க்க