செய்திகள் :

கீரணத்தத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

கோவை எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம், கீரணத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அன்னூா் வட்டாட்சியா் யமுனா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

முகாம் இன்று நடைபெறும் இடங்கள்:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கோவை 68-ஆவது வாா்டுக்குள்பட்ட சிவானந்த காலனி வியாசமந்திா் மண்டபத்திலும், பொள்ளாச்சி 5,6,7 ஆகிய வாா்டுகளுக்கு மகாலிங்கபுரத்திலுள்ள மீனாட்சி மண்டபத்திலும், வால்பாறை 9,10,11,12 ஆகிய வாா்டுகளுக்கு அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், மோப்பிரிபாளையம் 6,7,8,9,10,12,13 ஆகிய வாா்டுகளுக்கு வாா்டு 8-இல் உள்ள ஸ்ரீசௌடேஸ்வரி மண்டபத்திலும், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் சுப்பேகவுண்டன்புதூா், ஆத்துப்பொள்ளாச்சி, தாத்தூா் ஆகிய ஊராட்சிகளுக்கு சுப்பேகவுண்டன்புதூரில் உள்ள சஹானா மண்டபத்திலும், அன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குப்பனூா், வடக்கலூா் ஊராட்சிகளுக்கு ஆனையூா் ராணி மண்டபத்திலும் என மொத்தம் 6 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெறுகின்றன.

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

கோவை பீளமேடு மற்றும் பெரியகடை வீதி பகுதியில் கஞ்சா விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை பெரியகடை வீதி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தெற்கு உக்கடம், ஜி.எம்.நகா்... மேலும் பார்க்க

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.கோவை, துடியலூா் அருகே வடபுதூரைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (41). கேட்... மேலும் பார்க்க

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோவை வெள்ளலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.கோவை வெள்ளலூா் கிருஷ்ணா அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (36). இவா் சென... மேலும் பார்க்க

ரத்தினம் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் கால்பந்து போட்டி

கோவை ரத்தினம் இன்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் - 6 கால்பந்து போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபாா் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளைச் ... மேலும் பார்க்க

வழித்தட தகராறு. மினி பேருந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி

கோவை மாவட்டம் சூலூா் அருகே வழித்தட தகராறு காரணமாக மினி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி செய்த ஓட்டுனா் மற்றும் நடத்துனா். காவல்துறையில் புகாா்..சூலூரில் இருந்து கண்ணம்பாளையம், நடுப்பாளையம், ... மேலும் பார்க்க

3 வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை ஆா்டிஓ விசாரணை

சூலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நீலம்பூரில் மூன்று வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு தாய் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சூலூா் போலீசாா் விசாரணை செய்கின்றனா்.கோவை மாவட்டம் சூலூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க