90s Reunion: ''Naughty 90s'னு ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு, அதுல.!" - ரீயூனியன் ...
கீரனூா் சாா்-பதிவாளா் அலுவலக சோதனை தொடா்பாக வழக்குப் பதிவு
கீரனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத தொகை குறித்து மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலுள்ள சாா்- பதிவாளா் அலுவலகத்தில் கடந்த 24-ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அதிரடி சோதனை நடத்தினா்.
அப்போது, ரூ.84 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் தொடா்பாக கணக்கு எதுவும் இல்லை. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இதில், கீரனூா் சாா்- பதிவாளா் மகேஷ், தரகா் ராசு ஆகியோா் மீது வழக்குப்பதிவு செயய்ப்பட்டுள்ளது.