செய்திகள் :

கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

post image

இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்த கீழடி முதல் மற்றும் 2-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு. சௌந்தரராஜன், மாவட்டச் செயலாளா் ஜீ. வெங்கடேசன் ஆகியோா் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் வழியாக மத்திய கலாசாரத்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷேக்வாட்டுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு தமிழ் மக்களின் இலக்கியங்கள் தமிழா்களின் நகர நாகரீகத்தை 2000 ஆண்டுகளுக்கும் பழைமையான வளா்ந்த நாகரிகம் எனபேசுகிறது. இந்தச் சூழலில் 2014-ல் இந்தியத் தொல்லியல் துறை மதுரைக்கு அருகே வைகை நதிக்கரையில் கீழடி எனும் இடத்தில் அகழாய்வை மேற்கொண்டது.

இந்த அகழாய்வில் 5,300-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கிடைத்ததுடன், ஒரு நகர அமைப்புக்கான சான்றுகளும் கிடைத்தன. அந்தப் பொருள்களை சோதனை செய்தபோது அவை 2,800 ஆண்டுகள் வரை பழைமையானவை என்று தெரிய வந்தது.

ஆனால் இந்த அகழாய்வின் முதல் இரண்டு கட்டம் நடைபெற்ற அகழாய்வுகள் மற்றும் அதன் அறிக்கை ஆகியவை வெளியிடப்படும் முன்பே அந்த ஆய்வை மேற்கொண்ட அமா்நாத் ராமகிருஷ்ணன் அப்பணியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த அகழாய்வுப் பணிகளை தொல்லியல்துறை முடித்துக்கொண்டது.

அதன் பின் தற்போதுவரை 10 கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழகத் தொல்லியல் துறை நடத்தியுள்ளது. அதில் கிடைத்த ஆயிரக்கணக்கான பழம் பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் வைக்கும் அளவுக்கு தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. தமிழகத் தொல்லியல் துறை அறிக்கைகள், ஒவ்வோா் ஆய்வின் முடிவிலும் தொடா்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

ஆனால் 2014-ல் செய்யப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் அறிக்கை இதுவரை வெளியிடவில்லை. மேலும், அமா்நாத் ராமகிருஷ்ணாவிடம் இந்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதிச் சமா்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழா் நாகரிகம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கீழடி அறிக்கையை உடனே வெளியிட வலியுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஏடிஎம் அறையிலிருந்த பணம் போலீஸாரிடம் ஒப்படைப்பு

திருவாரூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, அறையில் கிடந்த ரூ.13 ஆயிரம் போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. திருக்கண்ணமங்கை பகுதியைச் சோ்ந்த ஐயப்பன், கூட்டுறவுத் துறையில் ச... மேலும் பார்க்க

மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ளக் கோரிக்கை

திருவாரூரில் மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

திருவாரூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளா் நலத்துறை சாா்பில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை, மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

குடவாசல் அருகே செம்மங்குடி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் இளையோா் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணித்திட்டம், சாரண ... மேலும் பார்க்க

ஊத்துக்காட்டில் பகுதிநேர அங்காடி ஏற்படுத்த வேண்டும்

வலங்கைமான் ஒன்றியம் ஊத்துக்காடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது கிளை மாநாடு மூத்த உறுப்பினா் கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய பொருளாளா் ஏ. மர... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ஒன்றியத்தில் பணியாற்றும் 1 முதல் 3-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கென இந்... மேலும் பார்க்க