செய்திகள் :

கீழடி விவகாரத்தில் தமிழக அரசு ஒத்துழைக்க தயங்குவது ஏன்? மத்திய அமைச்சர் ஷெகாவத்

post image

கீழடியை ஏற்றுக்கொள்ள வலுவான ஆதாரங்கள் தேவை என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஷெகாவத், இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, வரலாறு, அது கூறும் உண்மையும் உங்களின் மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது என்று தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருந்தார்.

மேலும், தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ஷெகாவத் மீண்டும் கீழடி தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:

”நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.

அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம்.

தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் - பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது: அமைச்சா் தங்கம் தென்னரசு

பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு

பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடா்பாக துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கூட்ட அரங்கில் ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வு எதிரொலி: சென்னைப் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு காரணமாக ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் தேதிகள் www.ideunom.ac.in இணையதளத்தில் ... மேலும் பார்க்க

பழங்குடியின மாணவிக்கு வீடு, மடிக்கணினி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை ஐஐடியில் உயர்கல்வி பயில தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவிக்கு வீடு மற்றும் மடிக்கணினியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(ஜூன் 14) விடுமுறை அறிவிப்பு

அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மு... மேலும் பார்க்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை- இபிஎஸ்

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்ப... மேலும் பார்க்க

ஜூன் 18-ல் திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

கீழடி அகழாய்வுகளை வெளியிட மறுக்கும் பா.ஜ.க அரசைக் கண்டித்து வரும் 18ஆம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக மாணவர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ந... மேலும் பார்க்க