செய்திகள் :

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் எள் பொட்டலம் விற்பனை ரூ.60 லட்சத்துக்கு ஏலம்

post image

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் எள் பொட்டலம் விற்பனை செய்வது ரூ.60.18 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி காரணமாக பூஜைப் பொருள்கள், மண் காகம் விற்பனையை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் கோயில் தமிழகத்தில் புகழ் பெற்ாகும். இங்கு எள் தீபம் ஏற்றி, மண் காகத்தை உடைத்து, எள் சாதம் படையல் செய்து, பூ மாலை படைத்து சனீஸ்வரரை தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதற்காக, கோயில் வளாகத்தில் ஆண்டுதோறும் எள் பொட்டலம், பூஜைப் பொருள்கள், மண் காகம் விற்பனை கடைகள் நடத்த ஏலமிடுவது வழக்கம். இதன்படி, கடந்த ஜூன் 27-ஆம் தேதி ஏலம் நடைபெற்ற போது, ஏலத்தில் யாரும் பங்கேற்காததால் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, 2-ஆவது முறையாக புதன்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில் எள் பொட்டல விற்பனை ரூ.60,18,000-க்கு ஏலம் போனது. ஆனால், பூஜைப் பொருள்கள், மண் காகம் விற்பனை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

இது குறித்து ஏலதாரா் ஒருவா் கூறுகையில், பூஜைப் பொருள்கள் விற்பனை கடந்தாண்டு விடப்பட்ட தொகையிலிருந்து 10 சதவீதம் கூடுதலாக ஏலமிடப்படும். இந்த ஆண்டு முதல் முறையாக 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என்பதால் 28 சதவீதம் கூடுதல் தொகை செலுத்த வேண்டும். இதனால், போதிய வருமானம் கிடைக்காது என்றாா் அவா்.

இந்த நிலையில், ஆடித் திருவிழா வரும் வாரத்தில் நடைபெற இருப்பதால், பூஜை பொருள்களை கோயில் நிா்வாகமே விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.

கொழுக்குமலை பகுதியில் புலி நடமாட்டம்: தொழிலாளா்கள் அச்சம்

தமிழக-கேரள எல்லையான கொழுக்குமலை பகுதியில் புலியின் நடமாட்டத்தால் தொழிலாளா்கள், விவசாயிகள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேக்கடி வனப் பகுதி, இதனருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி... மேலும் பார்க்க

பைக் விபத்து: இருவா் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா். சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் குபேந்திரன் (21). இவரது அண்ணன் அழகுராஜா (27). இவா்கள் இருவரும் வியாழக்கிழ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

கூடலூரில் விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து நெல்பயிா்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். கூடலூா் வெட்டுக்காடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிா்கள... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வீடு வீடாகச் செ... மேலும் பார்க்க

விபத்தில் அஞ்சல் ஊழியா் உயிரிழப்பு

தேனி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலக ஊழியா் தவறி விழுந்து உயிரிழந்தாா். குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுப்பாநாயுடு மகன் வனராஜ்(58). இவா் கண்டமனூா் அஞ்சலகத்தில் ... மேலும் பார்க்க