செய்திகள் :

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

post image

குஜராத் ரசாயன ஆலையில் இருந்து இன்று (செப். 10) நச்சு வாயு கசிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்திலுள்ள கோகம்பா தாலுகாவிலுள்ள ரஞ்சித்நகர் பகுதியில் செயல்பட்டுவரும் குஜராத் ஃபுளூரோ ரசாயன ஆலையில், நச்சுத்தன்மை வாய்ந்த வாயு இன்று வெளியேறியது.

முன்னதாக ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதாகவும், அதிலிருந்து நச்சு வாயு வெளியேறியதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்தத் தகவல் பொய்யானது என்றும் நச்சு வாயு மட்டுமே வெளியேறியுள்ளதாகவும் ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரையிலான நேரத்தில் குளிரூட்டிகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஆர்-32 என்ற நச்சு வாயு, பழுப்பில் இருந்து கசிந்ததாகக் கூறப்படுகிறது.

ஆலைக்குள் நடந்த இந்த சம்பவத்தால், தொழிலாளர்கள் பலருக்கு குமட்டல், தலைசுற்றல், வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. நிறுவனத்தின் உள் சுகாதாரக் குழு உடனடியாக மாற்று மருந்துகளை வழங்கி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பியது.

அதே நேரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐந்து தொழிலாளர்கள் பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக வதோதராவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆலை நிர்வாகத்தினர் விரைந்து செயல்பட்டபோதிலும், ஒரு தொழிலாளி வாயுக் கசிவால் உயிரிழந்ததாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | தில்லியில் 10 லட்சம் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

One dead, 12 hospitalised after toxic gas leak at Gujarat Fluoro Chemical Company

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

செப்டம்பர் 11-ஆம் தேதி இரண்டு மாறுபட்ட நினைவுகளைத் தூண்டுகிறது. முதலாவது, கடந்த 1893-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை ஆற்றிய நிகழ்வு. அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே, என்ற வார... மேலும் பார்க்க

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

நமது நிருபர்மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதை மாநில அரசுகள் வரவேற்பதாக உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசு வாதிட்டது.மசோதாக்கள் மீது ஆ... மேலும் பார்க்க

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளரானதாக வழக்கு: தில்லி நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் இடம்பெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவ... மேலும் பார்க்க

மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி- மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக ... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமா் மெலோனியுடன் பிரதமா் மோடி பேச்சு

இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினாா். அப்போது இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே முன்மொழியப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் உக்ரைன்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு?

குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் வி... மேலும் பார்க்க