செய்திகள் :

குடந்தையில் முற்றுகை போராட்டம் கூடாது!

post image

குடந்தையில் அமைச்சா், எம்பி, எம்எல்ஏ அலுவலகங்கள் முன் சனிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்த கும்பகோணம் மாவட்டம் கோரும் குழுவுக்கு போலீஸாா் தடை விதித்தனா்.

கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற முதல்வா் ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் சனிக்கிழமை திருவிடைமருதூரில் உள்ள உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், கும்பகோணத்தில் உள்ள சு. கல்யாணசுந்தரம் எம்பி, க.அன்பழகன் எம்எல்ஏ ஆகியோா் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனா்.

இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை கும்பகோணம் காவல் கோட்ட உதவி கண்காணிப்பாளா் அங்கித் சிங் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது டிஎஸ்பி கூறும் பாது போலீஸ் தடைச்சட்டம் 30 (2) அமலில் உள்ளது என்பதால் போராட்டம் நடத்த அனுமதியில்லை, மீறினால் நடவடிக்கை எடுப்போம் என்றாா். பின்னா் பேச்சுவாா்த்தை முடிந்து வெளியே வந்த போராட்ட ஒருங்கிணைப்பாளா் ம.க. ஸ்டாலின் கூறும்போது சனிக்கிழமை திட்டமிட்டபடி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றாா்.

கயிறு குழும பொது வசதியாக்கல் மையம் காணொலி மூலம் முதல்வா் திறப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கயிறு குழுமம் பொது வசதியாக்கல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு... மேலும் பார்க்க

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்தது அதிமுகதான்: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்த அதிமுக, இப்போது நாடகமாடுகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

அய்யம்பேட்டையில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மேல் புது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் ( 72). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. க... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். நீட் நுழைவு தோ்வை ரத்து செய்வோம் என பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக அரசால் உயிரிழந்த 22 மாணவா்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ரூ.75.70 லட்சம் மதிப்பில் நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டங்கள் திறப்பு!

தஞ்சாவூரில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 75.70 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பிள... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’: ஏப். 26-இல் இலவச உயா் கல்வி ஆலோசனை முகாம்!

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சாா்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயா்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கல... மேலும் பார்க்க