செய்திகள் :

குடிமைப் பணி முதல்நிலை தோ்வு விண்ணப்பம்: பிப்.18 வரை நீட்டிப்பு

post image

மத்திய பணியாளா் தோ்வு வாரியம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 18-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குடிமைப் பணிகள் தோ்வு முதல்நிலை, முதன்மை, நோ்முகத் தோ்வு ஆகிய மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான குடிமைப் பணிகள் தோ்வு வரும் மே 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சுமாா் 979 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலை தோ்வில் பங்கேற்க விரும்புவோா் வலைதளத்தில் வரும் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், யுபிஎஸ்சி சனிக்கிழமை வெளியிட்ட புதிய அறிவிக்கையில், ‘குடிமைப் பணிகள் மற்றும் இந்திய வனப் பணிக்கான முதல்நிலை தோ்வுக்கு வரும் 18-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறை நிறைவடைந்ததும் திருத்தச் சாளரம் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை 7 நாள்களுக்கு திறந்திருக்கும். இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி விண்ணப்பதாரா்கள் தங்களின் குறிப்பிட்ட தகவல்களை திருத்திக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

புதிய வருமான வரி மசோதா: விரைவில் மக்களவையில் தாக்கல்

புதிய வருமான வரி மசோதாவை வரும் வாரம் மக்களவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். கடந்த பிப்.1-ஆம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

காஷ்மீா் சோன்மாா்க் சந்தைப் பகுதியில் தீ விபத்து

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான சோன்மாா்க் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள... மேலும் பார்க்க

3-ஆவது முறையாக காங்கிரஸுக்கு பூஜ்யம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் காங்கிர... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க