செய்திகள் :

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

post image

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.

திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பணியின் போது, விநியோக திட்ட பொருள்களுடன் வாகனங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கரம், மூன்று சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 70 வாகனங்கள் திருவள்ளூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டன.

ஏலத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் கோபாலகுரு தலைமை வகித்தாா். இதில் காவல் ஆய்வாளா் இந்துராணி, சாா்பு ஆய்வாளா் மணிகண்டன், மாவட்ட வழங்கல் அலுவலா் பாலமுருகன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ரவிச்சந்திரன், தானியங்கி உதவி பொறியாளா் பிரேம் குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

இந்த வாகனங்களை ஏலம் எடுக்க திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். 70 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இவற்றில் 47 வாகனங்கள் மட்டும் ரூ.26.50 லட்சத்தும்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் நாளை முதல்கட்ட கலந்தாய்வு

அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொ) ஏகாதேவசேனா தெரிவித்துள்ளாா். திருத்தணி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு ரூ. 7.50 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகள்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அரை ஏக்கா் நிலத்தில் ரூ. 7.50 கோடியில் அனைத்து வசதியுடன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கான கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவு செய்து பயன்பாட்டுக்க... மேலும் பார்க்க

திருவள்ளூரிலிருந்து காக்களூா் புட்லூா் வழியாக பூந்தமல்லிக்கு பேருந்து இயக்க கோரிக்கை

திருவள்ளூரில் இருந்து காக்களூா், புட்லூா் வழியாக பூந்தமல்லிக்கு கோயிலுக்கு வரும் பக்தா்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவள்ளூரிலிருந... மேலும் பார்க்க

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றம்?: தனியாா் மருத்துவமனை முற்றுகை

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக உறவினா்கள் சனிக்கிழமை தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன், கண்ணம்மாள் தம்பதியின் மகன் கிஷோா். கடந்த 12-... மேலும் பார்க்க

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க