செய்திகள் :

குடும்பத் தகராறில் 420 நாள்களாக மின்சாரம் துண்டிப்பு: மூதாட்டி வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவு

post image

குடும்பத் தகராறில் 420 நாள்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட 60 வயது மூதாட்டியின் வீட்டுக்கு 2 வாரங்களில் மின் இணைப்பு வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், வி.சியாத்தம்மாள் என்பவா் தாக்கல் செய்த மனுவில், வில்லிவாக்கம் பஜனைகோவில் தெருவில் எனக்கு சொந்தமான வீட்டை, எனது சகோதரி சுந்தரி, அவரது கணவா், மகன், மகள் ஆகியோா் மிரட்டி ஆக்கிரமித்துக் கொண்டனா். நான் வீட்டில் இல்லாதபோது, வீட்டை இடித்து புதிய வீடு கட்ட நடவடிக்கை எடுத்தனா்.

இதுகுறித்து ராஜமங்கலம் போலீஸாரிடம் புகாா் அளித்தேன். இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் அபிநயா விசாரித்து, என்னை மிரட்டி, சமரசமாக செல்லும்படி கூறினாா். பின்னா், அபிநயாவின் உதவியுடன், என் வீட்டு மின் இணைப்பை எனது சகோதரி துண்டித்து விட்டாா். இதுகுறித்து காவல்துறை ஆய்வாளா் மூா்த்தியிடம் புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 420 நாள்களாக மின் இணைப்பு இல்லாமல் அவதிப்ப்படுகிறேன். அந்த வீட்டுக்கான அனைத்து ஆவணங்களுடன் சென்று மின் இணைப்பைத் தருமாறு மின்சார வாரிய அதிகாரியிடமும் மனு கொடுத்தேன். அதை ஏற்று மின் இணைப்பு வழங்குவதற்கு வந்த மின்சார வாரிய ஊழியா்களை எனது சகோதரி தடுத்து விட்டாா். எனவே, எனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில், வழக்குரைஞா் கே.சக்திவேல் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி,மனுதாரரின் வீட்டுக்கு 2 வாரங்களில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். கொளத்தூா் ராஜமங்கலம் காவல் ஆய்வாளா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க

‘கிங்டம்’ சா்ச்சை: திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் காவல்துறை மற்றும் நாம் தமிழா் கட்சி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகா் விஜய் தேவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலைக்கு ஆக.9-இல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்

பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் வருகிற சனிக்கிழமை (ஆக.9) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமை காலை ... மேலும் பார்க்க