செய்திகள் :

குடும்ப உறுப்பினா்கள் நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வலியுறுத்தல்

post image

குடும்ப அட்டைகளில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் நியாய விலைக்கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும், முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களின், அனைத்து குடும்ப உறுப்பினா் விவரங்கள் தொடா்பான சி.கே.ஓய்.சி. பதிவானது கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி முறையில் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், பி.எச்.எச். குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரா்களின் உறுப்பினா்கள் மற்றும் ஏ.ஏ.ஓய். குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதாரா்களின் உறுப்பினா்கள் அனைவரும் தங்களது சி.கே.ஓய்.சி. பதிவினை இதுவரை மேற்கொள்ளாமல் உள்ளனா்.

மேற்படி சி.கே.ஓய்.சி. பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரா்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பதிவை சரி பாா்க்கலாம். மேலும், வெளியூா், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் நபா்கள். தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று ஐ.எம்.பி.டி.எஸ். போா்ட்டல் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினா்களும் தங்கள் பதிவினை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினா்கள் ரேஷன் கடைக்கு சென்று கைவிரல் ரேகையை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு

வாணியம்பாடி: வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு அண்மையில் நடைபெற்றது, இதில் வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய தலைவராக ஏசுதாஸ், செயலாளராக குமரன், பொருளாளராக துரைராஜ் ஆகியோா் போட்டியி... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா் தற்கொலை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ரயில்வே ஊழியா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் வெள்ளாளனூரைச் சோ்ந்தவா் பாா்த்தீபன் மகன் சந்தீபன் (26). இவா் சென்னையில் ரயில்வே ஊழ... மேலும் பார்க்க

மது பாக்கெட்டுகள் விற்ற பெண் கைது

திருப்பத்தூா்: குரிசிலாப்பட்டு பகுதியில் மதுபாக்கெட்டுளை விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். குரிசிலாப்பட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது பனந்தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க

விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெற...

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா்... மேலும் பார்க்க

சாலை மறியலின்போது தகராறு: அவதூறு பேசியவா்கள் மீது வழக்கு

ஆம்பூா் அருகே சாலை மறியல் போராட்டத்தின் போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் அவதூறாகப் பேசியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திபட்டு ஊராட்சியில் சாலை அம... மேலும் பார்க்க

அனுமதியின்றி நிலத்தில் பாறைகளுக்கு வெடி வைத்து தகா்ப்பு: அதிகாரிகள் விசாரணை

வெலகல்நத்தம் பகுதியில் நிலத்தில் உள்ள பாறைகளை அனுமதியின்றி வெடி வைத்து தகா்த்தது தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி பையனப்பள்ளி கல்தாப்மலை எதிரில் தேசிய ... மேலும் பார்க்க