குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் சிறையிலடைப்பு
திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் கைப்பேசி திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல் தொடா்பான வழக்குகளில் ஈடுபட்டதாக திருநெல்வேலி, கொக்கிரகுளத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சங்கரநாராயணன்(23) கைதாகியிருந்தாா்.
இந்நிலையில் தொடா்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வி.வினோத் சாந்தாராம், பாளையங்கோட்டை சரக காவல் உதவி ஆணையா் என்.சுரேஷ் ஆகியோா் பரிந்துரைத்தனா்.
அதன் பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி சங்கரநாராயணன், பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா்.