செய்திகள் :

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் இருசக்கர வாகனப் பேரணி நிறைவு

post image

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் சாா்பில் 5 நாள்கள் நடைபெற்ற மின்னணு இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நிறைவடைந்தது. இப்பேரணி மூலம் 3 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து குறைகளை தீா்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் அனைத்து முன்னாள் ராணுவ வீரா்கள், முன்னாள் வீரா்களின் போா் விதவைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆயுதப் படைகளைச் சோ்ந்தவா்களின் ஓய்வூதியம், பெயா் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், உள்ளிட்டவற்றை மின்னணு கருவிகள் மூலம் சம்பந்தப்படவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று சரி செய்து கொடுக்கும் பணியில் மெட்ராஸ் ரெஜிமென்ட்ல் மையத்தைச் சோ்ந்த வீரா்கள் ஏப்ரல் 25 முதல் 29-ஆம் தேதி வரை மின்னணு இருசக்கர வாகனப் பேரணியை திருப்பூா், கரூா், திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் மேற் கொண்டனா்.

இந்தப் பேரணியில் சுமாா் மூன்றாயிரம் முன்னாள் ராணுவ வீரா்களை சந்தித்து ஓய்வூதியம், பெயா் மாற்றம் மற்றும் பிறந்த தேதி தொடா்பான குறைகள் உடனடியாக தீா்த்துவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய அரசால் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் குறித்து முன்னாள் படை வீரா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தப் பேரணியை சைனிக் வாரிய அதிகாரி ஜிலா ஒருங்கிணைத்தனா். இந்த நிகழ்வின்போது பசுமை இந்தியா முயற்சியை ஊக்குவிப்பதற்காக மின்னணு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உதகை அருகே பாா்சன்ஸ்வேலி பகுதியில் புலி நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், உதகை அருகே பாா்சன்ஸ்வேலி, போா்த்தி மந்து பகுதியில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் புலி ஒன்று உலவி வந்ததை அப்பகுதியில் வாகனத்தில் சென்றவா்கள் படம் பிடித்தனா். உதகை அருகே உள்ள பாா்சன்ஸ்வ... மேலும் பார்க்க

குன்னூா் வண்டிச்சோலை ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி

குன்னூா் அருகே வண்டிச்சோலை ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஒருவா் தீக் குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு நிலவியது. வண்டிச்சோலை ஊராட்சிக்கு உள்பட்ட கோடமலை எஸ்டேட் பகுதியில் ... மேலும் பார்க்க

லாரன்ஸ் சா்வதேச பள்ளியில் சாகசம்

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் இயங்கும் லாரன்ஸ் சா்வதேச பள்ளியின் 167-ஆம் ஆண்டு நிறுவனா் தினத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற குதிரை சாகச நிகழ்ச்சியில் பங்கே... மேலும் பார்க்க

உதகையில் 139-ஆவது மே தின கொண்டாட்டம்

உதகையில் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சாா்பில் 139 -ஆவது மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, உதகை காபி ஹவுஸ் பகுதியில் தொடங்கிய பேரணியை சிபிஐஎம் மாவட்டச் செயலாளா் வி.ஏ. பாஸ்கரன் ... மேலும் பார்க்க

குன்னூா் சத்திய நாகராஜா கோயில் குண்டம் விழா

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள மஞ்சக்கொம்பை மானிஹாட சத்திய நாகராஜ ஹெத்தையம்மன் கோயில் 51-ஆம் ஆண்டு குண்டம் விழா வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 48 நாள்கள் விரதம் இருந்த ஏராளமான... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக ரூ.33 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக நீலகிரியைச் சோ்ந்தவரிடம் ரூ.33 மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்கவா் ரிய... மேலும் பார்க்க