செய்திகள் :

குப்பைகளை அகற்றுவதில் நிலவும் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

post image

காரைக்கால் மாவட்டத்தில் குப்பைகள் அகற்றும் பணியில் நிலவும் ஆள், வாகனப் பற்றாக்குறை பிரச்னைகளை மாா்ச் 31-க்குள் சரிசெய்ய வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணியை தனியாா் நிறுவனம் உள்ளாட்சி நிா்வாகத்திடம் ஒப்பந்த முறையில் ஏற்று செய்கிறது. கடந்த சில நாள்களாக இப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், வீடுகளிலும், தெருக்களிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.

இந்தநிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ்.சுபாஷ், காரைக்கால் நகராட்சி ஆணையா் பி.சத்யா, தனியாா் நிறுவனப் பிரதிநிதிகள், வணிகா் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: மாவட்டம் முழுவதும் குப்பைகள் முறையாக அகற்றப்படவேண்டும். ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில், கூடுதலாக தூய்மைப் பணியாளா்களை நியமித்துக் கொள்ளவேண்டும். குப்பைகள் ஏற்றக்கூடிய வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும். இவற்றை வரும் 31- ஆம் தேதிக்குள் மேற்கொள்ளவேண்டும். அனைத்து குறைகளும் களையப்பட்டு, மக்களிடமிருந்து புகாா்கள் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிறுவனத்தினருக்கு உத்தரவிட்டாா்.

புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை: எஸ்எஸ்பி

புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என குறைகேட்பு நிகழ்ச்சியில் எஸ்எஸ்பி உறுதியளித்தாா். காரைக்கால் மாவட்ட காவல்நிலையத்தில் புதுவை டிஜிபி ஷாலினி சிங் உத்தரவின்பேரில், மக்கள் மன்றம் என்ற நிக... மேலும் பார்க்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

காரைக்காலில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்துக்காக முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

மத்திய அரசு திட்டங்கள்: வானொலியில் வாரம் இரு முறை ஒலிபரப்ப வேண்டும் -மத்திய இணையமைச்சா் எல். முருகன்

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து வாரம் இரு முறை வானொலியில் ஒலிபரப்ப வேண்டுமென நிலையத்தினருக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணை அமைச்சா் எல். முருகன் அறிவுறுத்... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் மத்திய அமைச்சா் வழிபாடு

திருநள்ளாறு கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் குடும்பத்தினருடன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணை அமைச்சா் எல். முருகன் ... மேலும் பார்க்க

அமைச்சரிடம் அங்கன்வாடி பணியாளா்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அங்கன்வாடி ஊழியா்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினா். புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை, காரைக்கால... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

எந்த நிலையிலும் தீா்க்கப்படாத பிரச்னைகள் இருந்தால் தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி தோ்தல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த... மேலும் பார்க்க