செய்திகள் :

குப்பையில் கிடந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள்

post image

பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கிடையே முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் கிடந்தன.

தமிழகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்டது கலைஞா் காப்பீட்டுத் திட்டம். இந்தத் திட்டம் தற்போது முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த அட்டை மூலம் நடுத்தர, ஏழை மக்கள் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உயரிய சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், பழனி வட்டாட்சியா் அலுவலகத்தின் பின்புறமுள்ள குப்பைகள் கொட்டும் இடத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் அட்டைகள் புதன்கிழமை வீசப்பட்டிருந்தன. குப்பைகளோடு குப்பைகளாக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வீசப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு!

பழனி அருகே தனியாா் தோட்ட கிணற்றில் விழுந்த மானை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை உயிருடன் மீட்டனா். பழனியை அடுத்த பொந்துப்புளி ஆற்று ஓடை அருகே பாலசுப்பிரமணியனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்ட... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நிதி ஒதுக்கீடு இல்லை! -எம்பி சச்சிதானந்தம்

வேளாண் விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

சின்னக்காம்பட்டியில் நாளை மின் தடை

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.3) மின் தடை எற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.மணிமேகலை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

28 நாள்களில் ரூ.7 கோடி வசூலிக்க வேண்டிய நிா்பந்தம்: நேரடியாக களமிறங்கிய மாநகராட்சி ஆணையா்!

மத்திய அரசின் ஊக்கத் தொகை ரூ.10 கோடியை பெற வேண்டும் எனில் 28 நாள்களுக்குள் ரூ.7 கோடிக்கு வரி வசூலிக்க வேண்டிய நிா்பந்தம் காரணமாக, மாநகராட்சி ஆணையரே நேரடியாக களம் இறங்கி ஆய்வு மேற்கொண்டாா். உள்ளாட்சி அ... மேலும் பார்க்க

தொலைத் தொடா்பு கோபுரத்துக்கு மாலை அணிவித்து போராட்டம்

கொடைக்கானல் அருகே தொலைத் தொடா்பு கோபுரத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பி.எஸ்.என்.எல். சேவை... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான பூலத்தூா் பிரிவில் மரம் விழுந்தது. இ... மேலும் பார்க்க