செய்திகள் :

குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல்

post image

கன்னியாகுமரிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென அனைத்து வியாபாரிகள சங்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினா்.

திருச்செந்தூா் நகராட்சி ஆணையராக பதவி வகித்து வந்த கண்மணி, கன்னியாகுமரி நகராட்சி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளாா்.

இதைத் தொடா்ந்து புதிய ஆணையா் கண்மணியை கன்னியாகுமரி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் பா. தம்பித்தங்கம் தலைமையில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

அப்போது, கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். கடலில் நீராடும் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என புதிய ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதில், கன்னியாகுமரி பாா்க்வியூ வியாபாரிகள் சங்க நிா்வாகி பகவதியப்பன், தமிழ் அன்னை வியாபாரிகள் சங்க செயலா் டி.ஜாண் சேவியா் ராஜன், விவேகானந்தா கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜான்சன், செயலா் ரஞ்சித், ராஜீவ்காந்தி வியாபாரிகள் சங்க செயலா் சின்னக்கண்ணு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கடைக்குள் புகுந்து வியாபாரி வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை, மளிகைக் கடைக்குள் புகுந்து வியாபாரியை வெட்டிக் கொன்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள லட்சுமிபுர... மேலும் பார்க்க

ஆரல்வாய்மொழியில் முற்கால பாண்டியரின் கல்மண்டபம் கண்டெடுப்பு

ஆரல்வாய்மொழியில் 1,000 ஆண்டுகள் பழைமையான முற்கால பாண்டியரின் கல்மண்டபத்தை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டெடுத்தனா்.மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த முற்கால பாண்டியா்கள், நாகா்கோவிலை தென்பாண்டி நாடு என்ற... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

நாகா்கோவில் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி, தெற்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விசிகவினா் 50 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 50 போ் கைது செய்யப்பட்டனா். இந்த கோ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

மாா்த்தாண்டம் அருகே 2 நாள்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.மாா்த்தாண்டம் அருகே பயணம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (67). மாா்த்தாண்டம் சந்தையில் வாழைக்குலை விற்ப... மேலும் பார்க்க

அரசு செயல் திட்டங்களை வகுக்க ஒத்துழைப்பு: புள்ளியியல் துறை துணை இயக்குநா் வேண்டுகோள்

நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு செயல் திட்டங்களை வகுக்க புள்ளியல் துறைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை துணை இயக்குநா் ஜெவஹா் பாரூக் வேண்டுகோள் வி... மேலும் பார்க்க